பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்.. அரசு ஊழியர்களின் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 26 ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

Indefinite strike from Feb 26: JACTO - GEO announced

அரசு துறைகளில் காலியாக இருக்கும் 30 சதவீதத்துக்கு மேலான இடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள், அரசு ஊழியர்கள் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஜாக்டோ - ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூடி ஆலோசித்தனர். இந்த ஆலோசனைக்கு பிறகு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டதாவது:-

Indefinite strike from Feb 26: JACTO - GEO announced

பிப்ரவரி 15 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மார்ச் 1 ஆம் தேதி தொடங்க உள்ள பிளஸ் டூ தேர்வை புறக்கணிக்கவும் தயங்க மாட்டோம். என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+