கப் சிப் மோடில் ‘இந்தியா’ கூட்டணி.. 5 மாநில தேர்தலில் ஆப்சென்ட்! காரியம் சாதிக்குமா காங்கிரஸ் கட்சி
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் என்ன செய்கிறது? விரிவாக பார்ப்போம்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளன. நவம்பர் மாதம் 5 மாநிலங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டாலும் ஒரே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் - காங்கிரஸ் இடையிலும், மிசோரத்தில் எம்.என்.எஃப் - காங்கிரஸ் - ZPM ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.

இதில் 5 மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்கட்சியாகவோ நேரடி போட்டியில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலுக்கான செமி பைனல் என்று அழைக்கப்படும் இந்த 5 மாநில தேர்தலில் என்ன செய்கிறது? என்ற கேள்வி எழுகிறது. அதன்படி பார்த்தால் ஒரு மாநிலத்தில் மட்டும் அரசியல் செய்து வரும் கட்சிகள் காங்கிரஸின் வெற்றியை எதிர்பார்த்து இருக்கும்.
ஆனால், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், என்.சி.பி, சிவசேனா போன்ற கட்சிகள் பல மாநிலங்கள் சில தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கம். ஆனால் இந்த 5 மாநில தேர்தல் பணிகள் தொடங்கியவுடன் இந்தியா கூட்டணி கூட்டங்கள், பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த கட்சிகள் 5 மாநில தேர்தலை பயன்படுத்தி தங்கள் ஒற்றுமையை மீண்டும் நிரூபித்து இருக்கலாம் என்ற கருத்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஒரு வழியிலும் காங்கிரஸ் வேறு வழியிலும் செல்கிறது. இது இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டதை போன்ற தோற்றத்தை காட்டுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் குறைந்த பட்ச செயல்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாக கூறினாலும், அதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும். ஆனால், பாஜகவின் செயல்பாடுகள் எல்லாம் மக்களவைத் தேர்தலை நோக்கியே இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணியின் இந்த அமைதி என்பது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டு உள்ளது.
தெலுங்கானாவில் ராகுல் காந்தி கலந்துகொண்ட காங்கிரஸின் விஜயாபெரி பஸ் யாத்திரை என்பது அம்மாநிலத்தில் வரவேற்பை பெற்று உள்ளதாக அம்மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கானாவில் ஆட்சியமைக்கும் வகையில் அதற்கு ஆதரவு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற இந்த யாத்திரை, அதில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டது போன்றவை அக்கட்சிக்கு சாதகமாக அமைந்து உள்ளது. கடந்த ஆண்டு ராகுல் காந்தி தெலுங்கானாவில் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரைக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதனை எதிர்கொள்ள அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சியும் தீவிர பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு உள்ளது. அவருக்கும் அம்மாநிலத்தில் ஏகோபித்த மக்கள் செல்வாக்கு உள்ளது. காங்கிரஸை பொறுத்தவரை இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் தெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்கிறார். பீகாரில் சாதி வாரி இடஒதுக்கீட்டிற்கு பிறகு மற்ற மாநிலங்களிலும் இதே வாக்குறுதியை காங்கிரஸ் வழங்கி உள்ளது. அத்துடன் இலவசங்களும் தேர்தல் வாக்குறுதிகளிலும் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications