பாகிஸ்தானின் கழுத்தை நெரித்த இந்தியா.. மொத்தமாக முடங்கிய வர்த்தகம்.. பல ஆயிரம் கோடி போச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பாகிஸ்தானிய வணிகர்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதன் விளைவாக பாகிஸ்தானின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான இந்தியாவின் தடை

பாகிஸ்தானுக்குச் சொந்தமான அல்லது பாகிஸ்தானுக்குச் செல்லும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்தத் தடை கடந்த 2025 மே 2 அன்று பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தானியப் பொருட்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியத் துறைமுகங்கள் வழியாகக் கப்பல்களில் அனுப்பப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

India Pakistan

பி.டி.ஐ-ன் தகவலின்படி, இந்த கடுமையான கட்டுப்பாடு கடல்சார் தளவாடங்களை மட்டுமல்லாமல், அந்நாட்டு வணிகத்தையும் முடக்கியுள்ளது. மேலும், வர்த்தகத்தில் நடைபெறக்கூடிய மோசடிகளைத் தடுக்கவும் இது உதவியாக இருக்கிறது. இதன் மூலம் இந்திய அரசாங்கம் எல்லை தாண்டிய வர்த்தகத்தைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த கண்காணிப்பு நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் டீப் மேனிஃபெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா 200% ஆக உயர்த்தியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2018-ல் 2.41 பில்லியன் டாலர்களாக இருந்த வர்த்தகம், 2024-ல் வெறும் 1.2 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தகத் தடையின் விளைவுகள்

இந்தியா பாகிஸ்தான் உடனான வர்த்தக நடவடிக்கைகளை முழுவதுமாக நிறுத்தியுள்ளது. இதன் விளைவாக பாகிஸ்தானின் மருந்துத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தனது மருந்து மூலப்பொருட்களில் சுமார் 30% முதல் 40% வரை இந்தியாவைச் சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் (API) மற்றும் பல்வேறு மேம்பட்ட சிகிச்சைக்கான பொருட்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு வந்தன. தற்போது இந்த வர்த்தகத் தடை காரணமாக பாகிஸ்தானுக்கு அவை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஏற்றுமதி 2019-ல் 547.5 மில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு அது வெறும் 480,000 டாலர்களாகக் குறைந்தது. இந்தியா பாகிஸ்தானுக்கு சரக்குக் கப்பல்களை அனுப்புவதற்குத் தடை விதித்ததன் விளைவாக, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானிய இறக்குமதியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் அதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த மாற்றங்கள் பாகிஸ்தானிய வணிகர்களுக்குக் கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளன.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முடக்கம்

பாகிஸ்தானுடனான வர்த்தக நிறுத்தம் என்பது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டதைக் குறிக்கிறது. முன்பு இந்தியா பாகிஸ்தானுக்கு நேரடி ஏற்றுமதி மற்றும் துபாய் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் வழியாகவும் ஏற்றுமதி செய்து வந்தது. அதேபோல், இறக்குமதியும் இந்த இரண்டு வழிகளில் நடைபெற்றது. தற்போது இந்த இரண்டு வழிகளிலும் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தடைகள் காரணமாக இரு தரப்பிற்கும் இடையே 100% வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக உரத்துறை, மருந்து துறை, ஆடைகள் துறை, ஸ்டீல் துறை மற்றும் பர்னிச்சர் துறை ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த துறைகள் இந்தியப் பொருட்கள் இல்லாமல் தள்ளாடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக மருத்துவத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இடைத்தரகர் நாடுகள் மூலம் நடந்த வர்த்தகம்

பாகிஸ்தானில் இருந்து சுமார் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான உலர் பழங்கள் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட பொருட்கள் இடைத்தரகர் நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைவதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு நேரடியாக அனுப்பப்பட்ட 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது கணிசமான அளவு பொருட்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை போன்ற மூன்றாம் நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளினால் கடந்த சில வாரங்களில் மட்டும் பாகிஸ்தானுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக, பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவை இந்தியா முறித்துக் கொண்டதன் காரணமாக பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறைகள் கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால் பாகிஸ்தானிய வணிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+