மோசமான சல்பர் டை ஆக்ஸைடு வாயு.. அதிகம் உமிழும் சென்னை, நெய்வேலி.. சுற்றுச்சூழல் நிபுணர்கள் அதிர்ச்சி
சென்னை: சல்பர் டை ஆக்ஸைடு வெளியேறும் நகரங்களில் சென்னைதான் உலகின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.
Recommended Video
உலகளவில் சல்பர் டை ஆக்ஸைடை அதிகமாக வெளியேற்றும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து 5ஆவது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த ஆய்வை கிரீன்பீஸ் இந்தியா மற்றும் எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று பற்றிய ஆராய்ச்சி மையமான சிஆர்இஏ நடத்தி அண்மையில் அறிக்கை வெளியானது.
இந்த அறிக்கையில் 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் சல்பர் டை ஆக்ஸைடு உமிழ்வது 6 சதவீதம் குறைந்துள்ளது.

சீனா மூன்றாவது இடம்
இது நான்காண்டுகளில் மிகப் பெரிய சரிவாக கருதப்படுகிறது. எனினும் இந்தியா தொடர்ந்து 5ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சல்பர் டை ஆக்ஸைடை இந்தியா 19 சதவீதம் உமிழ்ந்துள்ளது. இதன் மூலம் இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்திலும் ரஷ்யா இரண்டாவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

நுரையீரல்
சல்பர் டை ஆக்ஸைடு காற்றை விஷத்தன்மையுடன் மாசுப்படுத்தும். இதனால் மனிதர்களுக்கு பக்கவாதம், இதய நோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் இளவயதில் மரணம் ஏற்படுவது போன்றவை நடக்கும். இந்த வாயு சுவாச மண்டலத்தையும் நுரையீரலையும் கடுமையாக பாதிக்கிறது.

சென்னை, நெய்வேலி
இந்த அறிக்கையின் படி இந்த அபாயகரமான வாயு வெளியேறும் நகரங்களில் சிங்க்ராலி, நெய்வேலி, சிபாட், ராமகுண்டம், சந்திரபூர், விசாகப்பட்டினம், சென்னை, சூரத், கோர்பா, முந்திரா உள்ளிட்டவை உள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்துமா
தமிழகத்தில் சென்னை, நெய்வேலியில் சல்பர் டை ஆக்ஸைடு அதிகம் உமிழப்படுவதாக வந்த அறிக்கையால் சுற்றுச்சூழலியலாளர்கள் கவலையில் உள்ளனர். இந்த வாயுவால் இருமல், மூச்சு பிரச்சினை, ஆஸ்துமா உள்ளிட்டவை ஏற்படும். இந்த வாயு இதய நோய்களையும் உண்டாக்கும் என்பதால் சென்னை, நெய்வேலி மக்களை கவலையடையச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications