Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்தது 3 கப்பல்கள்.. 24 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு வர ரூட் போடும் இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து நேற்று ஒரு இந்திய கப்பல் மும்பையை வந்தடைந்த நிலையில், இன்று ஷிவாலிக் மற்ரும் நந்தா தேவி ஆகிய இரண்டு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து, இந்தியா நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி சிக்கித் தவிக்கும் 24 கப்பல்களுக்கு இந்தியா பாதுகாப்பான பாதையை எதிர்நோக்கி வருகிறது.

இந்திய கொடி ஏந்திய இரண்டு சரக்கு கப்பல்கள் வளைகுடா நாட்டில் இருந்து எல்பிஜி உடன் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி என அறியப்படும் இந்த சரக்கு கப்பல்கள் தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி வந்து கொண்டுள்ளன. அந்த மாநிலத்தின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களுக்கு இந்த கப்பல்கள் வந்து கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு சரக்கு கப்பல்களிலும் சுமார் 92,700 டன் எல்பிஜி உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

India Moves to Secure Safe Passage for 24 Vessels Amid Strait of Hormuz Tensions

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தாக்குதலை தொடங்கின. அதையடுத்து ஈரானும் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் போர் மூண்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு கொண்டு வரும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து முடங்கியது. இந்த ஜலசந்தியில் ஈரான் முடக்கவில்லை என தெரிவித்தது. இருப்பினும் தாக்குதல் சார்ந்த பதற்றம் காரணமாக போக்குவரத்து முடங்கியது.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதியில் முடங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்களில் தற்போது எல்பிஜி உடன் குஜராத் வந்து கொண்டிருக்கும் இரு கப்பல்களும் அடங்கும். இந்​தி​யா​வின் கச்சா எண்​ணெய் மற்​றும் எல்பிஜி தேவை​யில் 80 சதவீதத்​துக்​கும் மேலாக இறக்​குமதியைச் சார்ந்தே உள்​ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழித்​தடத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டால் இந்​தி​யப் பொருளா​தா​ரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.

இதன் பின்​னணி​யில்​தான், இந்​தி​ய கப்​பல்​களுக்கு மட்டும் ஈரான் தற்போது விலக்கு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீராக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. முன்னதாக, மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்​சங்​கர், ஈரான் வெளி​யுறவு அமைச்சர் அப்​பாஸ் அரக்ச்​சி​யுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோ​சனை நடத்தினார்.

அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

நமது நாட்டில் கடந்த ஓரிரு நாட்களாக எல்பிஜி சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், வணிக சிலிண்டர்களின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுக்க ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையை சரி செய்ய, ஈரானுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தது. அதன் விளைவாக இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளிக்கப்பட்டது.

பாரசீக வளைகுடா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 28 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த கப்பல்களில் 24 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திக்கு மேற்கே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 677 மாலுமிகள் உள்ளனர். கிழக்கே நிறுத்தப்பட்டுள்ள 4 கப்பல்களில் 101 இந்திய மாலுமிகள் உள்ளனர். இந்த கப்பல்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+