சபாஷ்! பாராட்டிய மத்திய அரசு.. 'இதுதான் தமிழ்நாட்டின் வேகம்'.. நான்கே நாட்களில் முடித்த ஸ்டாலின்
சென்னை: மார்ச் 17 அன்று தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு பிரதமரின் மித்ரா ஜவுளிப் பூங்கா அறிவிக்கப்பட்டது. இதற்கு நான்கே நாட்களில் தேவையான நிலத்தை வழங்கி இன்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாக ஏற்பாடு செய்துவிட்டோம்! இதுவே தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாட்டின் வேகம்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமரின் மித்ரா ஜவுளிப்பூங்கா விருதுநகரில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைய போகிறது. இந்த 'மெகா' ஜவுளி பூங்கா தொடக்க விழா புதன்கிழமை நடந்தது. இந்த பூங்காவில் தொழில் தொடங்க முன்வந்துள்ள 11 நிறுவனங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்தியாவில் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் மாநில அரசுடன் இணைந்து பிரதமரின் மித்ரா பூங்கா எனப்படும் ஒருங்கிணைந்த மெகா ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை பூங்கா அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

ஜவுளிப்பூங்கா
இந்நிலையில் பிரதமர் அறிவித்த நான்கே நாட்களில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் பகுதியில் ஆயிரத்து 52 ஏக்கர் சிப்காட் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இதுபற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், மார்ச் 17 அன்று தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு பிரதமரின் மித்ரா ஜவுளிப்பூங்கா அறிவிக்கப்பட்டது. இதற்கு நான்கே நாட்களில் தேவையான நிலத்தை வழங்கி இன்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாக ஏற்பாடு செய்துவிட்டோம்! இதுவே தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாட்டின் வேகம்! என்று கூறியுள்ளார்.

2ஆயிரம் கோடி
இந்நிலையில் இந்தியாவின் முதல் பிரதமரின் மித்ரா ஜவுளிப்பூங்கா விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் பகுதியில் ஆயிரத்து 52 ஏக்கர் சிப்காட் நிலத்தில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைய உள்ளது. இதன் தொடக்க விழா தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் சார்பில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் புதன்கிழமை நடந்தது.

1231 கோடி
இந்த விழாவில் மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் ரச்சனா ஷா , முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் வர்த்தகம், தொழில்துறை மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் முன்னிலையில் இந்த ஜவுளி பூங்காவில் தொழில் தொடங்க முன்வந்துள்ள 7 பெரும் தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு வழிகாட்டு நிறுவனமும், 4 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் துணி நூல் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம் ரூ.1,231 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 6 ஆயிரத்து 315 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பியூஸ் கோயல் பாராட்டு
இந்த விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசுகையில், இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஜவுளித்துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. மெகா ஜவுளி பூங்காவை பெற இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. தமிழக அரசின் சிறப்பான பணி காரணமாக ஜவுளி பூங்காவை தமிழகம் பெற்றிருக்கிறது.

ஜவுளித்துறை
விவசாயத்துக்கு அடுத்தபடியாக 4 கோடி பேருக்கு நேரடியாகவும், 6 கோடி பேருக்கு மறைமுகமாகவும் ஜவுளித்துறை வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஜவுளிக்கான நூலை உருவாக்குவது, ஆடையாக உருவாக்குவது, வடிவமைப்பது, ஏற்றுமதி செய்வது என பல்வேறு கட்டங்களாக ஜவுளித்துறை பணிகள் நடக்கின்றன. அதுவும் வெவ்வேறு இடங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

20 லட்சம் வேலை
இந்த பணிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வரும்போது (ஜவுளி பூங்கா) ஆடையை உருவாக்குவதற்கான செலவு வெகுவாக குறையும். அதேநேரத்தில் உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டுதான் இந்த ஜவுளி பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த 7 பூங்காக்கள் மூலம் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி முதலீடுகளை பெற முடியும். இதுதவிர 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்" இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.

யார் யார் பங்கேற்பு
இந்த விழாவில் மத்திய ஜவுளி மற்றும் ரெயில்வே துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் எல்.முருகன், மாநில அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஆர்.காந்தி, தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் தலைவர் ரவி ஷாம், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் ஆகியோர் பேசினார்கள்.

அமைச்சர்கள்
விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பெரியகருப்பன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் இறையன்பு, கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சிப்காட் மேலாண்மை இயக்குனர் சுந்தரவல்லி, தியாகராஜா மில்ஸ் குழுமத்தின் செயல் இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications