சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்!
சென்னை: இந்திய வீடுகள் மற்றும் கோயில் அறக்கட்டளைகளில் சுமார் 30,000 முதல் 32,000 டன் வரை தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளின் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் தங்க இருப்பை விட இது பல மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில், வீடுகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்கத்தை மறுசுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியர்களுக்கும் தங்கத்துக்கும் உள்ள உறவு இன்று நேற்று உருவானது அல்ல. தலைமுறைகள் கடந்து சேமிப்பின் அடையாளமாகவும், பாதுகாப்பான முதலீடாகவும், குடும்ப சொத்தாகவும் தங்கம் பார்க்கப்பட்டு வருகிறது.

திருமணம் முதல் பண்டிகை வரை தங்கம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், தற்போது நாட்டில் வீடுகள் மற்றும் கோயில்களில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் தங்கம் குறித்து புதிய விவாதம் எழுந்துள்ளது. இதனால் இந்தியா உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வு நாடுகளில் ஒன்றாக உள்ளது.
இந்திய தங்கம்
ஆனால் நாட்டில் உற்பத்தியாகும் தங்கம் மிகவும் குறைவாக இருப்பதால், பெரும்பாலான தேவைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 2025-26 நிதியாண்டில் மட்டும் இந்தியா சுமார் 72.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மிகப்பெரிய அளவில் அன்னிய செலாவணி செலவிடப்படுகிறது. ஒரு நாடு அதிக அளவில் பொருட்களை இறக்குமதி செய்யும்போது, அதன் அன்னிய செலாவணி கையிருப்பில் அழுத்தம் ஏற்படும்.
தங்க மறுசுழற்சி
இந்நிலையில் இந்தியாவில் உள்ள வீடுகளில் பழைய நகைகள், உடைந்த ஆபரணங்கள், பழைய தங்க நாணயங்கள் அல்லது பயன்பாட்டில் இல்லாத தங்க பொருட்கள் பல ஆண்டுகளாக பெட்டிகளில் முடங்கி கிடக்கின்றன. இவற்றை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் உருக்கி, சுத்திகரித்து, மீண்டும் 24 கேரட் தூய தங்கமாக மாற்றுவதே தங்க மறுசுழற்சி எனப்படுகிறது. இந்த முறையின் மூலம் புதிய தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டிய அவசியம் குறையும்.
கோயில் தங்கம்
அதே நேரத்தில் நாட்டிற்குள்ளேயே தங்க தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். பொருளாதார வல்லுநர்கள் கூறுவதன்படி, இந்திய வீடுகள் மற்றும் கோயில்களில் இருக்கும் தங்கத்தில் ஆண்டுக்கு வெறும் 1 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டால்கூட அதன் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும். 32,000 டன் தங்கத்தில் 1 சதவீதம் என்றால் சுமார் 320 டன் தங்கம். இந்த அளவு தங்கம் சந்தைக்கு வந்தால், இந்தியாவின் ஆண்டு தங்க இறக்குமதியில் 25 முதல் 30 சதவீதம் வரை குறைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
அன்னிய செலாவணி
இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய செலாவணியை இந்தியா சேமிக்க முடியும். தங்க மறுசுழற்சி அதிகரித்தால் அரசுக்கு பல்வேறு வகைகளில் நன்மை கிடைக்கும்.முதலாவதாக, வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்கும் செலவு குறையும். இதனால் அன்னிய செலாவணி கையிருப்பு பாதுகாக்கப்படும். இரண்டாவதாக, வர்த்தக பற்றாக்குறை குறைய வாய்ப்பு உள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த உதவும். மூன்றாவதாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்க அடிப்படையிலான திட்டங்களை விரிவுபடுத்த முடியும். இதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதி கிடைக்கும்.
மத்திய அரசு
இந்தியாவில் பல பெரிய கோயில்கள் ஆயிரக்கணக்கான கிலோ தங்கத்தை வைத்துள்ளன. எனினும், கோயில் தங்கத்தை பயன்படுத்துவது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயமாக பார்க்கப்படுகிறது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கம் என்பதால், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக சமூக மற்றும் மத ரீதியான விவாதங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இதனால், கட்டாய நடவடிக்கைகளை விட தன்னார்வ அடிப்படையிலான திட்டங்களையே மத்திய அரசு அதிகமாக ஊக்குவித்து வருகிறது.
தங்கத்தின் விலை
தற்போது தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் பழைய நகைகளை மாற்றுவது, மறுசுழற்சி செய்வது போன்ற செயல்பாடுகளில் மக்கள் ஆர்வம் அதிகரித்துள்ளதாக நகை விற்பனை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல முன்னணி நகைக்கடைகள் வெளிப்படையான மாற்று திட்டங்கள் மற்றும் தங்க பரிமாற்ற வசதிகளை வழங்கி வருவதால், பழைய தங்கத்தை புதிய ஆபரணங்களாக மாற்றும் நடைமுறையும் அதிகரித்து வருகிறது.
பொருளாதார வலிமை
இந்திய வீடுகள் மற்றும் கோயில்களில் உள்ள 32,000 டன் தங்கத்தில் ஒரு சிறிய பகுதி கூட பொருளாதாரச் சுழற்சிக்குள் வந்தால், தங்க இறக்குமதி குறையும். அன்னிய செலாவணி சேமிக்கப்படும். வர்த்தக பற்றாக்குறை கட்டுப்பாட்டுக்குள் வரும். நாட்டின் பொருளாதார வலிமை மேலும் அதிகரிக்கும். அதனால்தான், "புதிய தங்கத்தை வாங்குவதற்கு முன் வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்கத்தை பொருளாதார பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள்" என்ற கருத்தை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications