Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலத்தை பின்னோக்கி மாற்ற விரும்பும் இந்தியா.. 27 நிமிடங்கள் பின்னோக்கிச் செல்வது சாத்தியமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி அதிகாரத்தை மட்டும் கைப்பற்றவில்லை.. காலத்தையே மாற்றியிருந்தனர். ஆங்கிலேயே காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்றும் காலணி ஆதிக்கத்தை நினைவுப்படுத்தும் சட்டங்கள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் உள்ளன. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி நகரமே நேரத்தை அளவிடும் உலகின் மையப் புள்ளியாக இருந்தது. ஆனால் ஆங்கிலேயேர்கள் அதனை மாற்றினார்கள். இந்நிலையில் மீண்டும் அதேபோல் மாற்ற இந்தியா திட்டமிடுகிறது. அப்படி செய்தால் வழக்கமான நேரத்தை விட 27 நிமிடங்கள் பின்னோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் சாத்தியமே இல்லை என்கிறார்கள்.

இந்தியாவின் காலக்கணக்கீடு என்பது லண்டனில் உள்ள கிரீன்விச் நேரத்தைப் பின்பற்றுவது போல, பண்டைய காலத்தில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி தான் உலகின் மையப்புள்ளியாக பண்டைய வானியல் அறிஞர்கள் ( கி.பி. 4-ம் நூற்றாண்டிலேயே வராஹமிஹிரர் மற்றும் ஆர்யபட்டர் போன்ற இந்திய வானியல் மேதைகள்) நம்பினார்கள்.

India Seeks to Turn Back Time Is It Possible to Go Back 27 Minutes

காலத்தின் கடவுள்

ஏனெனில் பூமியின் நிலநடுக்க கோடும், கடக ரேகையும் சந்திக்கும் நேர்க்கோட்டில் உஜ்ஜயினி அமைந்திருப்பதால், இது நேரத்தை கணக்கிட மிகச்சரியான இடமாக கருதினார்கள். அத்துடன் உஜ்ஜயினியில் உள்ள மஹாகாளேஸ்வரர் கோவில், 'காலத்தின் கடவுளாக' போற்றப்படுவதும், அங்கிருக்கும் 'ஜந்தர் மந்தர்' வானியல் ஆய்வகம் அன்றே துல்லியமான காலக் கணக்கீட்டிற்குப் பயன்படுத்தப்பட்டது. இது பூமியின் மத்திய ரேகைக்கும் வட துருவத்திற்கும் இடைப்பட்ட தூரத்தில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்தது.

சூரியன் உஜ்ஜயினிக்கு இரண்டு முறை வரும்

ஆண்டுக்கு இரண்டு முறை, சூரியன் உஜ்ஜயினிக்கு நேர் உச்சியில் வருவதால், நிழல்களின் அளவை வைத்து நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது. இதனால் கிரகணங்கள், கோள்களின் இயக்கம் ஆகியவற்றை ஆராய உஜ்ஜயினி சிறந்த இடமாக கருதப்பட்டது. நமது பஞ்சாங்கங்கள் மற்றும் ஜோதிடக் கணக்கீடுகள் ஏற்கனவே உஜ்ஜயினி நேரத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்க்கிறது. ஆனால் ஆங்கிலேயர்கள், இந்த நேரக் கணக்கீட்டினை மாற்றி 1905-ம் ஆண்டு இந்தியத் திட்ட நேரம் (ஐ.எஸ்.டி.) என்பதனை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தினார்கள்.

அரசு ஊழியர்கள், விஐபிகளுக்கு மத்திய அரசு பெரிய ட்விஸ்ட்.. சுங்கச்சாவடிகளில் 10ம் தேதி முதல் மாற்றம்
அரசு ஊழியர்கள், விஐபிகளுக்கு மத்திய அரசு பெரிய ட்விஸ்ட்.. சுங்கச்சாவடிகளில் 10ம் தேதி முதல் மாற்றம்

2 மணி நேர வித்தியாசம்

இந்த நடைமுறை என்பது உத்தரப்பிரதேசத்தின், அலகாபாத் அருகே மிர்சாபூர் வழியாகச் செல்லும் 82.5 கிழக்கு தீர்க்கரேகையை அடிப்படையாகக் கொண்டது. தற்போது உலகளாவிய கிரீன்விச் சராசரி நேரத்தை விட (ஜி.எம்.டி.) இந்தியா 5 மணி நேரம் 30 நிமிடங்கள் முன்னதாக இருக்கிறது. இருப்பினும், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களுக்கும் (அசாம், அருணாசல பிரதேசம்), மேற்கு மாநிலங்களுக்கும் (குஜராத்) இடையே சூரிய உதயத்தில் சுமார் 2 மணி நேர வித்தியாசம் இருந்து வருகிறது.

மத்திய கல்வி அமைச்சர் கருத்து

இதுபற்றி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் கூறுகையில், இந்தியத் திட்ட நேரத்திற்குப் பதிலாக 'மஹாகால் ஸ்டாண்டர்டு டைம்' எனப் பெயரிட ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்றார் . மத்திய அரசு திட்டம் என்னவென்றால், உலக நேரக் கணக்கீட்டின் தொடக்கப்புள்ளி லண்டனில் உள்ள கிரீன்விச் அல்ல, மாறாக இந்தியாவின் உஜ்ஜயினிதான் என்பதை உலகிற்கே தெரிய வைப்பது தான்.. அத்துடன் ஆங்கிலேயர்களின் அடையாளங்களை அகற்றி, பழங்கால கால முறையை நவீன அறிவியலுடன் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.. ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

27 நிமிடங்கள் பின்னால் போகும்

உண்மையில் இந்த 'மஹாகால் ஸ்டாண்டர்டு டைம்' (எம்.எஸ்.டி.) நடைமுறைக்கு வந்தால், அது இந்தியாவின் காலக் கணக்கீட்டில் கலாசார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சில முக்கிய மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும். மிக முக்கியமாக இந்திய நேரமானது தற்போதைய நேரத்தை விட சுமார் 27 நிமிடங்கள் பின்னோக்கி சென்றுவிடும்.

நேரம் மாறும்

அதாவது, இப்போது மணி காலை 6 மணி என்றால், புதிய முறைப்படி 5 மணி 33 நிமிடங்களாக மாறிவிடும். மேலும் உலக நேரத்தின் தொடக்கப்புள்ளியாக (பிரைம் மெரிடியன்) லண்டனில் உள்ள கிரீன்விச் கருதப்படுவதற்குப் பதிலாக, வரலாற்று ரீதியாக இந்தியாவின் உஜ்ஜயினிக்கு உலக அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அப்படி மாற்றினால் இந்தியாவில் உள்ள அனைத்து கணினிகள், ஸ்மார்ட்போன்கள், கடிகாரங்கள் மற்றும் சர்வர்களில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும். சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் பங்குச் சந்தை நேரங்கள் வரை அனைத்திலும் மாற்றங்கள் வரும்.

சாத்தியமே இல்லை

ஆனால் நடைமுறையில் இது சாத்தியமே இல்லை என்பது தான் எதார்த்தம். பண்டைய காலத்தில் உஜ்ஜயினி நேரத்தை அடிப்படை இருந்தது உண்மைதான்- ஆனால் இன்றுள்ள கம்யூட்டரை அடிப்படையாக கொண்ட உலகில் ண்டும் நடைமுறைப்படுத்துவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத காரியம். ஏனெனில் இன்று உலகம் முழுவதும் UTC மற்றும் GMT அடிப்படையில்தான் நேரங்கள் உள்ளன. சர்வதேசப் பங்குச்சந்தைகள், விமானப் போக்குவரத்து, மற்றும் கடல்வழிப் போக்குவரத்து அனைத்தும் இந்த ஒரு புள்ளியை மையமாக வைத்தே பிணைக்கப்பட்டிருக்கிறது.

வேலூர் தொழில் அதிபர்களால் ட்விஸ்ட்.. ஜோலார்பேட்டையில் கேசி வீரமணிக்கு கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது
வேலூர் தொழில் அதிபர்களால் ட்விஸ்ட்.. ஜோலார்பேட்டையில் கேசி வீரமணிக்கு கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது

குழப்பம் ஏற்படும்

நாம் இந்திய நேரத்தின் மையப்புள்ளியை மாற்றினால், சர்வதேச அளவில் நாம் தனிமைப்படுத்தப்படுவோம் அல்லது தகவல் பரிமாற்றத்தில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அத்துடன் ரிசர்வ் வங்கி முதல் சாதாரண UPI பரிவர்த்தனை வரை அனைத்தும் 'Timestamp' எனப்படும் கால முத்திரையை அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பதால் சிக்கல் ஏற்படும். ஏனெனில் கணினிக் கட்டமைப்பில் ஒரு வினாடி மாற்றம் ஏற்பட்டால் கூட, கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் தோல்வியடையும் இதனை மாற்ற வேண்டும் என்றால், ஒட்டுமொத்த மென்பொருள் கட்டமைப்பையும் மாற்றி அமைக்க வேண்டியிருக்கும். இது பல லட்சம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் வேலை என்பதால் சாத்தியம் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+