பிரதமர் மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்னும் பிரதமர் மோடியின் சுட்டுரையை வரவேற்கிறோம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழில் பதிவிட்ட டுவிட்டர் பதிவில்:- திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு தலை வணங்குகிறேன். திருவள்ளுவரின் சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.

India should study Thirukural: Vairamuthu welcomes Prime Minister Modis comment

அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில் இதை வரவேற்று சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில். இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்னும் பிரதமர் மோடியின் சுட்டுரையை வரவேற்கிறோம்.

India should study Thirukural: Vairamuthu welcomes Prime Minister Modis comment

தேசிய நூலாகத் திருக்குறளை அறிவிக்க இதுவே தக்க தருணம் என்றும் தெரிவிக்கிறோம்.

திருவள்ளுவர் திருநாளில்
திருவள்ளுவர் சிலைக்கு
மாலை அணிவித்தோம்.
#திருவள்ளுவர்தினம்" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+