ஒரு பக்கம் கூண்டில் சிதம்பரம்.. இன்னொரு பக்கம் நிர்மலாவின் அதிரடி.. இது இந்தியன் வங்கியின் கதை!
இந்தியன் வங்கி அலகாபாத் வங்கியுடன் இணையும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது
Recommended Video
சென்னை: காலம் எவ்வளவு விசித்திரமானது.. அதன் முகங்கள்தான் எத்தனை எத்தனை.. ஒரு பக்கம் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக் கூண்டில் ப.சிதம்பரம் நின்றுகொண்டிருக்கிறார்.. இன்னொரு பக்கம் ப.சிதம்பரத்தின் தாத்தாவால் நிறுவப்பட்ட இந்தியன் வங்கியானது, அலகாபாத் வங்கியுடன் இணைக்கும் செயல் அரங்கேறி வருகிறது.
நாளுக்கு நாள் நெருக்கடியில் சிக்கி வருகிறார் ப.சிதம்பரம். சுமத்தப்பட்டுள்ளதோ ஊழல் குற்றச்சாட்டு.. அரசியல்வாதிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டு என்பது இயல்பான ஒன்று என்றாலும், ப.சிதம்பரம் ஏன் ஊழல் செய்ய வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இதற்கு காரணம், இவருடைய முன்னோர்கள்தான். 20 ஆண்டுகள் மத்திய அமைச்சர், 27 ஆண்டுகள் எம்பி, 9 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்பதையும் தாண்டி, சிதம்பரத்துக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு ரொம்பவும் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது தாய்வழி தாத்தா செட்டிநாட்டு அரசர் அண்ணாமலை செட்டியார். இவரது அண்ணன் ராமசாமி செட்டியார். இவர்தான் இந்தியன் வங்கி நிறுவனர்களில் ஒருவர். இந்தியன் வங்கிய இவரும் கிருஷ்ணசாமி ஐயர் என்பவரும் இணைந்து உருவாக்கினர். அதன் முதல் இயக்குநர்கள் இவர்கள்தான். பின்னர் இந்தியன் வங்கி இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்டது.
இன்று ஆளும் பாஜக தரப்பு.. சிதம்பரத்தை ஊழல் புரிந்தமைக்காக சுழட்டியடித்து, விரட்டி பிடித்து நெருக்கடி தந்து வருகிறது. இன்றுகூட இந்த கேஸ் விஷயமாக கோர்ட்டுக்கு வந்து போனார் சிதம்பரம். இப்படி ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் அதே சமயம்தான், சிதம்பரத்தின் தாத்தா உருவாக்கிய இந்தியன் வங்கியை அலகாபாத் வங்கியுடன் இணைப்பதற்காக உத்தரவை அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். இந்த விந்தையை நாம் எப்படி பார்ப்பது?!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications