சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

Indian chief election commissioner sunil arora and team will visit Tamilnadu on April 1.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் ஏப்ரல் 1ல் தமிழகம் வருகை தருகிறார். 2ம் தேதிவரை தமிழகத்தில் தங்கியிருந்து அவர் தனது ஆய்வுப் பணியை மேற்கொள்வார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தலைமை தேர்தல் ஆணையர், சுனில் அரோரா மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் ஏப்ரல் 1ல் தமிழகம் வருகிறார்கள்.

Indian chief election commissioner sunil arora visit Tamilnadu

ஏப்ரல் 2ம் தேதிவரை சென்னையில் தங்கியிருந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை சென்னைக்கு அழைத்து அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதுதவிர, அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் ஆயத்தங்களை முழுமையாக அவர்கள் ஆய்வு செய்து, தேவைப்படும், அறிவுரைகளை வழங்குவார்கள்.

இது வழக்கமான நடைமுறைதான். இதேபோன்று தேர்தல் நடைபெற உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலைமை தேர்தல் ஆணையர் சென்று, தேர்தல் ஏற்பாடுகளை முடுக்கிவிடுவார்.

தலைமை தேர்தல் அதிகாரி வருகையால், தமிழகத்தில் தேர்தல் பணிகள் மேலும் சுறுசுறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+