ஸ்டாலினுடன் இ.கம்யூ வேட்பாளர்கள் சந்திப்பு.. காரணம் இதுதான்
Recommended Video
ஸ்டாலினுடன் இ.கம்யூ வேட்பாளர்கள் சந்திப்பு..வீடியோ
சென்னை: லோக்சபா தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கூட்டணியின் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்தனர்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான அறிவிப்பை ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இந்த நிலையில், திருப்பூரில் சுப்பராயன், நாகப்பட்டினத்தில் செல்வராஜ் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களாக, அந்த கட்சியால் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, சென்னையில் இன்று ஸ்டாலினை சந்தித்து, சுப்பராயன் மற்றும் செல்வராஜ் இருவரும் வாழ்த்து பெற்றனர். கூட்டணி தலைவர் என்ற வகையில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
எம்எல்ஏ, எம்பி பதவியை வகித்த அனுபவம் கொண்டவர்கள் இந்திய கம்யூ. வேட்பாளர்கள்
Comments
English summary
Indian Communist Party candidates for the upcoming Lok Sabha election in Tamil Nadu met DMK chief MK Stalin. They says it is a courtesy call.