கடலூர் - பாம்பனிடையே கரையை கடக்கும் 'கஜா'... திசை மாறியது புயல்
Recommended Video

டெல்லி: கஜா புயல் நவம்பர் 15ம் தேதி முற்பகலில் கடலூர் பாம்பனிடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினம் வடகிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவில் நீடிக்கிறது. இதன் தாக்கம் நவம்பர் 14ம் தேதி முதல் இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கரை திரும்பவும், நவம்பர் 15 வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நவம்பர் 15ம் தேதி முற்பகலில் கஜா புயலானது சென்னை நாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கஜா புயல் கரையை கடக்கும் திசையில் மாற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
புயல் நவம்பர் 15ம் தேதி முற்பகலில் தான் கரையை கடக்கும் என்றும், ஆனால் புயல் கடலூர் பாம்பன் இடையே கரையை கடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் நவம்பர் 14 மாலை முதல் கடலூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யும் வாய்ப்பும் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications