ராமநாதபுரத்தை அடம் பிடித்து வாங்கிய முஸ்லீம் லீக்! திமுக விட்டுக்கொடுத்த பின்னணி?
சென்னை: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுடன் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக நடத்தி வரும் நிலையில், ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கேட்டு வந்தது. தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் நேரு, காதர் மொகிதீனின் வேண்டுகோள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறி பேசியிருக்கிறார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாகும். இன்று நேற்றல்ல காயிதேமில்லத் காலம் தொட்டு திமுகவுடன் நட்புறவை பேணி வரும் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி. மேலும் அக்கட்சியின் தேசியத் தலைவராக காதர் மொகிதீன் வந்ததிலிருந்து திமுகவுடன் சுமூகமாக உறவு பேணப்படுகிறது.
இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 2 எம்.பி.சீட்களை எதிர்பார்த்த முஸ்லீம் லீக், திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் அதுபற்றியும் எடுத்துக் கூறியது. ஆனால் 1 தொகுதி தான் என்பதில் திமுக தரப்பு கறார் காட்டியதால் மேற்கொண்டு அந்த விவகாரத்தில் முஸ்லீம் லீக் தீவிரம் காட்டவில்லை.
ராமநாதபுரம் தொகுதி கிடைக்காவிட்டால் திருச்சி நாடாளுமன்ற தொகுதியையாவது தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கோரிக்கையாக இருந்தது. மற்றப்படி வேலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தொகுதிகள் வேண்டாம் என்றே கூறிவிட்டது. ஏற்கனவே திருச்சி தொகுதிக்கு டிமாண்ட் அதிகம் என்பதால் மீண்டும் ராமநாதபுரத்தையே முஸ்லீம் லீக் கட்சிக்கு கொடுத்துவிடலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். யாருக்காக இல்லாவிட்டாலும் காதர் மொகிதீனுக்காகவும் அவரது வயதுக்காகவும் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவோம் என ராமநாதபுரத்தை விட்டுக்கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ராமநாதபுரம் தொகுதியை திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி எதிர்பார்த்து காய் நகர்த்தி வந்த நிலையில், திமுக தலைமை எடுத்துள்ள இந்த முடிவு அவருக்கு ஏமாற்றம் அளித்திருக்கக் கூடும். ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மீண்டும் நவாஸ் கனியே களம் காண்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், நவாஸ் கனி எம்.பி.க்கு பொதுவெளியில் கைகலப்பு உருவாகி வார்த்தைப் போர் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர்களை ஜெயிக்க வைக்காவிட்டால் அமைச்சர் பதவி பறிபோய்விடும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்திருப்பதால் ராஜகண்ணப்பன் மனக்கசப்புகளை மறந்து முஸ்லீம் லீக் வேட்பாளரை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications