நாட்டிலேயே ஏழை எம்எல்ஏ.. கடன் வாங்கி போட்டி.. சட்டப்பேரவை செல்ல 330 கி.மீ பைக் பயணம்.. யார் இவர்?
சென்னை: நாட்டிலேயே ஏழை எம்எல்ஏவாக மத்திய பிரதேசம் மாநிலம் சைலானா தொகுதியில் போட்டியிட்ட கமலேஷ் தோடியார் கருதப்படுகிறார். இவரை பற்றிய முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
அரசியல்வாதிகள் என்றாலே செல்வ செழிப்பாக இருப்பார்கள்.. ஊழல்வாதிகள் என்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால், இதை மறுதலிக்கும் வகையில் சில நேர்மையான அரசியல்வாதிகளும் எளிமையான மக்கள் பிரதிநிதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாகத்தான் சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் எளிய பின்னணியில் இருந்து வந்த ஒருவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்

மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 3 ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் பாஜக வென்று ஆட்சி அமைத்துள்ளது. மத்திய பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள சைலானா தொகுதியில் பாரத் ஆதிவாசி கட்சி சார்பில் போட்டியிட்டு கமலேஷ் தோடியார் வெற்றி பெற்றார். இவரது கட்சியில் வென்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ இவர் தான் ஆவார்.
டெலிவரி வேலை பார்த்துகொண்டு: சொந்தமாக வீடு எதுவும் இன்றி மண்குடிசை வீட்டில் வசித்து வரும் தோடியார், தனது தொகுதியில் இருந்து போபாலில் உள்ள சட்டப்பேரவைக்கு கூட பைக்கிலேயே சென்றுள்ளார். தன்னிடம் கார் எதுவும் இல்லாமல் 380 கி.மீட்டர் தொலைவுக்கு பைக்கிலேயே பயணம் செய்து இருக்கிறார். மிகவும் எளிய குடுமப்த்தில் பிறந்து வந்த கமலேஷ் தோடியார் சட்டம் பயின்று இருக்கிறார்.
டெல்லியில் உள்ள பல்கலைக் கழகத்தில் தோடியார் எல்.எல்.பி படித்துள்ளார். படிப்பதற்கு போதிய வசதி இல்லாததால் டிபன் டெலிவரி பாயாக வேலை பார்த்துக் கொண்டே தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்து இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிட்டுள்ளார். எனினும் தோல்வியை தழுவினார். பின்னர் லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்து இருக்கிறார்.
கடன் வாங்கி தேர்தல் வேலை: அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிடவும் பிரசாரம் செய்யவும் பணம் இலலாததால் கிரவுட் ஃபண்டிங் எனப்படும் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுதல் மூலமாகவும் கடன் வாங்கியும் தான் தேர்தல் வேலைகளை பார்த்துள்ளார். தனது வெற்றியின் மூலம் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை பெற்று அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றதை கொண்டு வர முடியும் என தோடியார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உடன் பிறந்தவர்கள் 9 பேர்: நாட்டிலேயே மிகவும் ஏழை எம்.எல்.ஏவாக கருதப்படும் தோடியார் பற்றிய பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தோடியார் குடும்பத்தை பற்றி சொல்வது என்றால் அவருடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர். தோடியார்தான் கடைசி மகனாகும். தோடியாரின் தாயார் கூலி வேலை செய்து வருகிறார். எம்.எல்.ஏ வின் சகோதார்களும் தொழிலாளர்களாவே பணியாற்றி வருகின்றனர்.
11 முறை சிறை சென்றவர்: அவரது மூன்று சகோதரிகளுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. தோடியார் மீது 15 வழக்குகளும் உள்ளன. 11 முறை சிறைச்சாலைக்கும் சென்று வந்துள்ளார். பழங்குடியின மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத்தான் அவர் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications