பைலட்டுகள் பற்றாக்குறை.. முடங்கிப்போன இண்டிகோ விமான சேவை.. நாடு முழுதும் பரிதவிக்கும் பயணிகள்
சென்னை: பைலட்டுகள் பற்றாக்குறையால் நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 3வது நாளாக நாடு முழுவதும் இண்டிகோ விமானங்கள் காலதாமதமாக புறப்படுவதோடு, சில விமானங்கள் பைலட்டுகள் இல்லாமல் ரத்தும் செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
நம் நாட்டில் இயங்கி வரும் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ. இந்நிலையில் தான் கடந்த 1ம் தேதி முதல் இண்டிகோ விமான நிறுவனத்தில் பைலட்டுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 2 நாட்களாக இண்டிகோ விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அரசு டேட்டாவின்படி டிசம்பர் 1ம் தேதி 49.5 சதவீத விமானங்கள் தான் சரியான நேரத்துக்கு புறப்பட்டு சென்றனர். இது நேற்று மோசமானது. நேற்றைய தினம் 35 சதவீதம் விமானங்கள் மட்டுமே சரியான நேரத்துக்கு புறப்பட்டு சென்றன.
இன்று 3வது நாளாகவும் இண்டிகோ விமான சேவை சிக்கலை சந்தித்துள்ளது. அதன்படி மும்பை விமான நிலையம், பெங்களூர் விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு செல்கின்றன. மேலும் பல விமானங்களின் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மும்பையை எடுத்து கொண்டால் மும்பை - மாலத்தீவு விமானம் உள்பட பல விமானங்கள் தாமதமாக கிளம்பின. பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்தை எடுத்து கொண்டால் பல விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஹைதராபாத்தில் 19 இண்டிகோ விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் விடுமுறையில் உள்ள விமானிகளையும் மீண்டும் பணிக்கு திரும்பி வர நிறுவனம் கடந்த ஒரு வாரமாக அழைத்து வருகிறது. ஆனால் அவர்கள் பணிக்கு மீண்டும் திரும்பவில்லை. அதேபோல் பணியில் உள்ளவர்கள் தங்களின் விடுமுறை சார்ந்த சலுகைகளை விட்டு கொடுக்கும்படி நிறுவனம் கோரிக்கை வைத்தது. ஆனால் விமானிகள் அதனை ஏற்கவில்லை. இதனால் பைலட் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது.
திடீரென பைலட்டுகளின் இந்த பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த புதிய ரூல்ஸ் தான். அதாவது Stricter rest and duty norms ல் முழுவதுமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் தான் தற்போது பைலட்டுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications