இண்டிகோ பயணிகளுக்கு நிம்மதி.. சென்னை ஏர்போர்ட்டில் சர்ப்ரைஸ் மாற்றம்.. இனிமேல் பிரச்சனை இருக்காது
சென்னை: நாடு முழுக்க கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இண்டிகோ விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. நிலைமை சீராக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், இப்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. நேற்றைய தினம் 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் ரத்து செய்யப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் மிகப் பெரிய விமானச் சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ இருந்து வந்துள்ளது. முக்கிய நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை எல்லா இடங்களுக்கும் இண்டிகோ விமானச் சேவை கொடுத்து வந்தது. இந்தச் சூழலில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த ஒரு வாரமாகவே இண்டிகோ நிறுவனத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.

நவம்பர் 1ம் தேதி முதலே ஏகப்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 1500+ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒவ்வொரு நாளும் கூட 500+ விமானங்கள் ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் அளவுக்கு இதனால் நாடு முழுக்க மிக மோசமான ஒரு சூழலே உருவானது.
மத்திய அரசு விமானிகள் மற்றும் விமானக் குழுவுக்கு அறிவித்த புதிய விதிமுறைகளே இதற்குப் பிரதானக் காரணமாகும். நிலைமை மோசமானதால் இந்த விதிமுறைகளில் சிலவற்றை மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதன் பிறகே இண்டிகோ விமானச் சேவை மெல்லச் சீராக ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது.
சென்னை விமான நிலையத்தைப் பொறுத்தவரை நேற்றைய தினம் 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. சென்னையில் இருந்து புறப்படும் 18 விமானங்கள், சென்னைக்கு வரும் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இன்றைய தினம் 14 விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் 14 இண்டிகோ விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்னும் ஓரிரு நாட்களில் விமானச் சேவை மொத்தமாக நார்மல் ஆகும் எனத் தெரிகிறது. இதுவரை விமான ரத்தால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வந்த நிலையில், இனிமேல் அந்தச் சிக்கல் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. மீண்டும் இதுபோன்ற ஒரு சூழல் ஏற்படாமல் இருக்கவும் இண்டிகோ தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றே தெரிகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications