தீக்குச்சியைவிட சூடாகும் விலையேற்றம்... தீப்பெட்டி உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த முடிவு
சென்னை: மூலப் பொருட்களில் விலையேற்றம் காரணமாக 6 ஆம் தேதியிலிருந்து 17 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.
நாடு முழுவதும் அனைத்து வகையான பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலையும் கணிசமான அளவு அதிகரித்து உள்ளது.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உற்பத்தியாளர்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்து இருக்கின்றனர்.

5 லட்சம் தொழிலாளர்கள்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 50 முழு நேர தீப்பெட்டி ஆலைகள், 320 பகுதிநேர தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளை பேக்கிங் செய்வதற்கென்றே 2,000 பேக்கிங் ஆலைகள் உள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் பேருக்கு இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இவர்களில் 90% பேர் பெண்கள்.

தீப்பெட்டி ஆலைகள் எங்கு உள்ளன?
பட்டாசு உற்பத்திக்கு பெயர்போன விருதுநகரில் தீப்பெட்டிகளும் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிவகாசி, சாத்தூரில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி முக்கியமான தொழிலாக உள்ளது.

சர்வதேச அளவில் விற்பனையாகும் தமிழ்நாடு தீப்பெட்டி
தமிழ்நாட்டின் இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிதான் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு பல்வேறு பிராண்டுகளின் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால், விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டினாலும் தொழிலாளர்களுக்கு கிடைப்பது சொற்பத் தொகைதான்.

தீப்பெட்டி தொழிலுக்கு ஏற்பட்ட நெருக்கடி
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை வாட்டிவதைத்து வரும் விலைவாசி உயர்வு தீப்பெட்டி தொழிலையும் விட்டுவைக்க வில்லை. இதனை உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களான பாஸ்பரஸ், மெழுகு, குளோரைடு, அட்டை, பேப்பர் போன்றவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

14 ஆண்டுகளுக்கு பின் தீப்பெட்டி விலை உயர்வு
இதனை தாக்குபிடிக்க முடியாமல் ரூ.1-க்கு விற்கப்பட்டு வந்த தீப்பெட்டியின் விலை 14 ஆண்டுகளுக்கு பின் ரூ.2 ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும் கடந்த 3 மாதங்களில் தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை 30 முதல் 40% வரை அதிகரித்து இருப்பதால் தீப்பெட்டி விலையை உயர்த்தியும் பலன் கிடைக்கவில்லை. எனவே 600 தீப்பெட்டிகளை கொண்ட பண்டலின் விலையை ரூ.300-ல் இருந்து ரூ.350 ஆக உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

உற்பத்தி நிறுத்த அறிவிப்பு
தீப்பெட்டி விலையை உயர்த்துவதன் மூலம் மட்டும் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்பதை உணர்ந்த உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களின் விலையை குறைக்க அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே வரும் ஏப்ரல் 6 ஆம் தேதியிலிருந்து 17 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications