4 சட்டசபை இடைத்தொகுதிகளுக்கு நடுவிரலில் மை வைக்கும் அதிகாரிகள்
Recommended Video
சென்னை: தமிழகத்தின் 4 சட்டசபை இடைத்தொகுதிகளில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவானது மாலை 6 மணி வரை நடைபெறும்.
தேனியில் வாக்குப்பதிவு இயந்திரம் சரிவர செயல்பட வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபோல் சூலூர் தொகுதிக்குள்பட்ட கருமத்தம்பட்டியில் மக்கள் நீதி மய்யம் மற்றும் உழைப்பாளர் கட்சியின் பொத்தான்கள் அழுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படும் இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படுகிறது. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டுள்ளதால் தற்போது நடைபெறும் தேர்தலில் நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.
வெயிலின் தாக்கத்துக்கு பயந்து வாக்குச் சாவடிகளில் காலையிலேயே வாக்காளர்கள் குவிந்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.