சென்னையில் பேருந்தில் பயணம் செய்கிறீர்களா? அடியோடு மாறும் முறை.. நடக்க போகிறது தரமான சம்பவம்
சென்னை: சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு திட்டத்தின் கீழ், 616 பேருந்து நிறுத்தங்கள் மற்றும் முனையங்களில் டிஜிட்டல் எல்இடி பலகைகள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்த பலகைகள் பேருந்து வழித்தடங்கள் மற்றும் வருகை நேரங்கள் குறித்த நிகழ்நேர தகவல்களைக் காண்பிக்கும்.
இதுவரை, 400க்கும் மேற்பட்ட பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 50க்கும் அதிகமான இடங்களில் இவற்றின் செயல்பாடுகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. 2,600 மாநகரப் போக்குவரத்துக் கழக (MTC) பேருந்துகளில் GPS சாதனங்கள் பொருத்தப்பட்டு, மொபைல் செயலிகள் மற்றும் இணையதளம் மூலம் நேரடி கண்காணிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் பலர் இந்த முயற்சியைப் பாராட்டியுள்ள நிலையில், சிலர் இதன் நம்பகத்தன்மை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் டிசம்பர் 2024 இல் தொடங்கப்பட்டு, அடுத்த மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் GCC சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களை புதிய தரத்திற்கு கேட்ஸ் எழும் பணியில் உள்ளது. தரைத்தளம், கை பிடிகள், கூரை, விளக்கு ஏற்பாடுகள், சாய்வு பாதை அமைப்பது, இருக்கை பழுது பார்ப்பது, தொட்டிகள் வைப்பது போன்ற பல மாற்றங்களை செய்து வருகிறது.
சென்னையில் உள்ள முக்கியமான பல பேருந்து நிலையங்கள் அடுத்த 2 மாதங்களில் அடையாளம் தெரியாமல் மாற்றப்பட உள்ளன. சென்னையின் எல்லா ஏரியாக்களில் உள்ள பேருந்து நிலையங்கள் மாற்றப்பட உள்ளன. ஏற்கனவே தொண்டியார்பேட்டை, கவியரசு கண்ணதாசன் நகர், முல்லை நகர், திரு.வி.க.நகர், பெரியார் நகர், அம்பத்தூர் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான மொத்த செலவு ₹80 கோடி. தி.நகர், ஆவடி, வள்ளலார் நகர், திருவான்மியூர், பாடியநல்லூர், ஐயப்பன்தாங்கல் ஆகிய பேருந்து நிலையங்கள் அடுத்த இந்த மே மாதத்திற்குள் நவீனப்படுத்தப்படும்.
அதேபோல் அடுத்த 4 மாதங்களில் ஆறு பேருந்து நிலையங்களை நவீனமயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மோசமான நிலையில் உள்ள 6 டெர்மினிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும் என சிஎம்டிஏ கடந்த ஆண்டு அறிவித்தது. அடுத்த ஆண்டு மேலும் ஆறு டெர்மினிகள் நவீனமயமாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
அதன்படி 2024க்குள் தி.நகர், ஆவடி, வள்ளலார் நகர், திருவான்மியூர், பாடியநல்லூர், ஐயப்பன்தாங்கல். பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) நகரத்திலும் அதைச் சுற்றியும் 30க்கும் மேற்பட்ட டெர்மினல்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
குத்தம்பாக்கம்
ஏற்கனவே சென்னையில் அமைக்கப்பட்டு வரும் புதிய குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அடுத்த 50 நாட்களில் திறக்கப்பட உள்ளது. 427 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் 2025ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் மக்களுக்காக திறக்கப்படும்.
90 சதவிகிதம் இதன் கட்டுமானம் முடிந்துள்ளது. அழகுபடுத்தும் பணிகள், மின்சார இணைப்பு பணிகள் உட்பட்ட 10 சதவிகித பணிகள் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றன. இது போக அம்பத்தூர் மற்றும் தொண்டியார்பேட்டை பேருந்து முனையங்களில் முறையே 57 மற்றும் 52 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது ஆகும். இதன் சீரமைப்புப் பணிகளும் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இது போக செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் புதிய பேருந்து முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சென்னை முழுவதும் உள்ள ஒன்பது பெருநகர பேருந்து முனையங்கள் பயணிகள் பயணத்தை எளிதாக்கும் வகையில் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.
இடமாற்றம் செய்யப்படுகிறது
இந்த நிலையில் பூந்தமல்லியில் இருந்து இயங்கி வரும் பேருந்துகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. சென்னையில் உள்ளூர் அளவிலான இணைப்பை மேம்படுத்த பூந்தமல்லி பேருந்து மையம் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.
MTC பூந்தமல்லியில் இருந்து குத்தம்பாக்கத்திற்கு 150 பேருந்துகளை மாற்றி இணைப்பை மேம்படுத்தும். பூந்தமல்லி டெப்போவில் 120 மின்சார பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக பெங்களூர், தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற வடக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வரவிருக்கும் பேருந்து நிலையங்களில் மற்ற அரசின் பயன்படுத்தாத வாகனங்களை நிறுத்துவதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications