தொடரும் நீயா? நானா? ஆட்டம்.. அதிமுகவில் இருந்து மேலும் இருவர் நீக்கம்.. இபிஎஸ் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து மேலும் இரண்டு நிர்வாகிகளை நீக்கி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து வருகிறது. இதனிடையே ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ், வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம்

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம்

இதனைத்தொடர்ந்து அதிமுகவின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக கூறி
ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் 2 பேர் உள்பட 18 பேரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் அதிமுகவில் நடந்து வரும் அதிகார மோதல் காரணமாக மாநில அளவில் மட்டுமல்ல மாவட்ட அளவிலும் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து மீண்டும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 21 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் பதிலடி

ஓபிஎஸ் பதிலடி

இதற்கு பதிலடியாக ஓ.பன்னீர் செல்வமும் கட்சியில் இருந்து 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார். இப்படி இருவரும் போட்டிபோட்டு நிர்வாகிகள் நீக்கம் என்று அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவில் இருந்து மேலும் இரண்டு பேரை இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அதிரடியாக நீக்கியுள்ளார்.

இபிஎஸ் அதிரடி

இபிஎஸ் அதிரடி

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் அமலன் சாம்ராஜ், மருத்துவ அணி இணைச்செயலாளர் ஆதிரா நேவிஸ் பிரபாகர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறிக்க முழு மூச்சில் இறங்கி இருக்கிறார். இதற்காக நாளை சென்னையில் அடையாறு நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் 62 எம்எல்ஏக்களிடம் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தில் கையெழுத்து வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன செய்வார் ஓபிஎஸ்

என்ன செய்வார் ஓபிஎஸ்

மறுபக்கம் ஓ.பன்னீர் செல்வம் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இதனால் ஓபிஎஸ்-ன் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+