சம வேலைக்கு சம ஊதியம்.. சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய இடை நிலை ஆசிரியர்கள் கைது
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினர். திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
சம வேலைக்கு சம ஊதியம் தரப்படும் என்ற வாக்குறுதியை திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்திருந்தது. தேர்தல் வாக்குறுதி 311 ஆக இந்த வாக்குறுதியை திமுக அளித்த நிலையில், ஐந்து ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த இரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வி இயக்குனரக அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 2-வது நாளாக சென்னையில் கூடிய அவர்கள் எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
குண்டுக்கட்டாக கைது
பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த ஆசிரியர்களை முதன்மை கல்வி அதிகாரி அலுவலக நுழைவுவாயில் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இடைநிலை ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பேருந்துகளில் வலுக்கட்டாயமாக ஏற்றினர்.
இதற்கு மத்தியில் முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை ஏற்க ஆசிரியர்கள் மறுத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். ஒரு சில ஆசிரியர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை தரதரவென இழுத்துச் சென்ற நிகழ்வும் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
இதனால் போலீசாருடன் ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டித்து கோஷமும் எழுப்பினர். போராட்டத்தின் போது சில ஆசிரியைகள் மயக்கமும் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 3 மணி அளவில் முடிவடைந்தது. போராட்டத்தில் பங்கேற்ற 1,300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமும் எழுப்பினர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பாணையின்படி
"நீதி வேண்டும்.. நீதி வேண்டும்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பாணையின் படி நீதி வேண்டும்" என்ற பதாகைகளையும் வைத்திருந்தனர். 2009 ஆம் ஆண்டு மே 31 வரை நியமிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக 8,370 ரூபாயும், அதே ஆண்டு ஜூன் 1 அன்று நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 5,200 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை சம்பளம் 3 ஆயிரத்திற்கும் மேல் வேறுபடுகிறது. ஒரே வேலை, ஒரே தகுதி இருந்தும் சம்பள வித்தியாசம் 16 ஆயிரம் வரை ஏற்பட்டுள்ளது. எனவே, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று போராடுவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications