இணையத்தில் பன்னாட்டு மார்கழி திருவருட்பா இசை விழா
சென்னை: திருவருள் பயணம் குடும்ப மாத இதழும் வள்ளலார் அறநிலையம் பெண்ணாடமும் இணைந்து முதலாம் ஆண்டு மார்கழி திருவருட்பா இசை விழாவை நடத்தி உள்ளன. இவ்விழா டிசம்பர் 16 ம் தேதி துவங்கி ஜனவரி 13 வரை ஒரு மாத நிகழ்வாக நடத்தப்பட்டது.
இணைய வழியில் நடைபெற்ற இந்த இசைவிழாவில் அமெரிக்கா ,சிங்கப்பூர் , ஆஸ்திரேலியா , இந்தியா போன்ற நாடுகளின் பள்ளி மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு, வள்ளலாரின் திருவருட்பா பாடல்களை பாடி மகிழ்ந்தனர் .

வள்ளலார் அறநிலையத்தலைவர் தயவு முத்துஜோதி தலைமையில் இந்நிகழ்ச்சி சிறப்போடு நடைபெற்றது . பள்ளி மாணவர்கள் ,பெற்றோர்கள் மற்றும் வள்ளலாரின் சனமார்க்க அன்பர்களிடம் இருந்து மிகுந்த வரவேற்பை பெற்றது இந்த நிகழ்ச்சி .

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தாங்கள் பாடிய பாடல்களை காணொளி, ஒலிப்பேழை வடிவாகவும் அனுப்பி இருந்தனர். மாணவர்கள் பாடி அசத்திய திருவருட்பா பாடல்கள் திருவருள் பயணம் வலையொளியில் பதிவேற்றம் செய்து பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications