7 மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்குமா?.. இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுவது என்ன?
சென்னை: பெட்ரோல் பங்க்குகள் நாளை தொடர்ந்து திறந்து வைத்திருக்க வேண்டும் என இந்தியன் ஆயில் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு , சென்னை ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட 7 மாவட்டங்களுக்கு அரசு பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கண்ட 7 மாவட்டங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவித்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து இன்றைய தினமே பெட்ரோல், டீசலை நிரப்ப பெட்ரோல் பங்க்குகளுக்கு முண்டியடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பெட்ரோல் பங்க்குகள் தொடர்ந்து திறந்து வைத்திருக்க வேண்டும். பெட்ரோல் பங்க்குகளை மூட எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications