சரியாக நேரம் பார்த்து.. சிஎஸ்கேவிற்கு வந்த நல்ல செய்தி?..உற்சாகத்தில் தோனி.. அப்போ வெற்றி கன்பார்மா
சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இன்று மிக முக்கியமான போட்டியில் ஆட உள்ளது. டெல்லியை ப்ளே ஆப் குவாலி ஃபயர் சுற்றில் சிஎஸ்கே எதிர்கொள்ள இருக்கிறது.
சிஎஸ்கே அணிக்கு இது மிக முக்கியமான போட்டியாகும். இந்த சீசனில் இரண்டு முறையும் சிஎஸ்கே டெல்லியிடம் வீழ்ந்துவிட்டது. இதனால் இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று வெற்றிபெற்றால் சிஎஸ்கே எளிதாக பைனல்ஸ் சென்றுவிடும்.
இதனால் சிஎஸ்கேவின் ஆட்டம் அதிக கவனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதிலும் கடைசியாக மூன்று போட்டியில் சிஎஸ்கே வரிசையாக தோல்வி அடைந்துள்ளது. இதனால் சிஎஸ்கே உடனே வெற்றி பார்மிற்கு திரும்ப வேண்டும்.

நல்ல பார்ம்
இந்த சீஸனின் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் நல்ல பார்மில் இருந்த சிஎஸ்கே கடைசியாக நடந்த மூன்று போட்டியில் தோல்வி அடைந்தது. டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வரிசையாக தோல்வி அடைந்தது. சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் பேட்டிங் மோசமாக சொதப்பியதே இந்த தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம் ஆகும்.

மிடில் ஆர்டர்
மிடில் ஆர்டரில் ஆட வேண்டிய ரெய்னா காயம் அடைந்தது. அதன்பின் மொயின் அலி பார்ம் இழந்தது. வாய்ப்பு கிடைத்தும் இரண்டு போட்டியில் உத்தப்பா சரியாக ஆடவில்லை. அதேபோல் தோனியின் பேட்டிங் பார்மும் மிக மோசமாக உள்ளது. ஜடேஜா, ராயுடு மிடில் ஆர்டரில் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலை உள்ளது.

ரெய்னா காயம்
ரெய்னா காயம் அடைந்தது சிஎஸ்கேவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முதல் பாதி ஐபிஎல் 2021 தொடரில் ரெய்னா சிறப்பாக ஆடினார். அதோடு ப்ளே ஆப் போட்டிகளில் ரெய்னா சிறப்பாக ஆடி உள்ளார். ஆனால் அவர் திடீரென காயம் அடைந்தது சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இவர் ப்ளே ஆப் ஆடுவதே சந்தேகமான விஷயமாக இருந்தது.

ப்ளே ஆப்
காயம் குணமடையுமா என்ற கேள்வி இருந்தது. ரெய்னாவின் இடத்தில் உத்தப்பாதான் ப்ளே ஆப் போட்டிகளில் ஆடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையில் ரெய்னா இன்றைய போட்டியில் ஆடுவார் என்று கூறப்படுகிறது. ரெய்னாவிற்கு காயம் சரியாகிவிட்டது.

காயம்
அவர் மீண்டும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் மீண்டும் சிஎஸ்கேவில் ஆடுவார் என்று தகவல்கள் வருகின்றன.முக்கியமான நேரத்தில் சிஎஸ்கே அணிக்கு இந்த நல்ல செய்தி சென்று இருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் 4வது இடம் அல்லது பழைய இடமான 3வது இடத்தில் ரெய்னா ஆட வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. ரெய்னா ஆடுவாரா இல்லையா என்பது இன்று மாலை உறுதியாகிவிடும்.

ரெய்னா
ரெய்னா ஆடும் பட்சத்தில் அது அணியில் மீண்டும் சமநிலையை கொடுக்கும். அதேபோல் தோனிக்கும் பிளான்படி செல்ல வசதியாக இருக்கும். ரெய்னா திரும்பி வருவது தோனிக்கும் உற்சாகத்தை கொடுக்கும். ரெய்னா திரும்பி வரும் பட்சத்தில் தொடர்ந்து தோல்வி பாதையில் சென்ற சிஎஸ்கே மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் வாய்ப்புகள் உள்ளன.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications