200 அடிச்சும் தோத்துட்டோம்னு கூச்சமா இருக்கா? போக போக பழகிடும்! ஆர்சிபி தோல்வி! அதிரிபுதிரி மீம்ஸ்!
சென்னை: நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான திரில்லிங் டி 20 போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. இதை வைத்து பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் இறங்கிய பெங்களூர் அணி தொடக்கத்தில் மெதுவாக ஆடினாலும் போக போக வேகம் காட்டியது. டு பிளசிஸ் 88, கோலி 41, தினேஷ் கார்த்திக் 32 ரன்கள் எடுக்க அந்த அணி 205-2 ரன்கள் எடுத்தது.
பெங்களூர் எளிதாக வெல்லும் என்று கருதப்பட்ட நிலையில், தவான் 43, ராஜபக்சே 43, ஷாருக்கான் 24, ஓடியன் 25 ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி எளிதாக இலக்கை அடைந்து வென்றது.

தோல்வி மேல் தோல்வி
பெங்களூர் அணியின் இந்த தோல்வியை பலர் கிண்டல் செய்து மீம் வெளியிட்டுள்ளனர். இந்த தொடரில் முக்கியமான மூன்று அணிகளும் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளன. பெங்களூர் அணி நேற்று பஞ்சாப்பிடம் தோல்வி அடைந்தது. அதேபோல் டெல்லியிடம் நேற்று மும்பை அணியும் தோல்வி அடைந்தது. அதற்கு முன் கொல்கத்தா அணியிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. மூன்று அணிகளும் வாங்கிய பலத்த அடியை கிண்டல் செய்து இவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

200 அடிச்சும் தோல்வி
பெங்களூர் அணி இதுவரை எந்த தொடரிலும் ஐபிஎல்லில் கோப்பை வென்றது இல்லை. இதை விமர்சனம் செய்து பலர் மீம் போட்டுள்ளனர். டு பிளசிடம் கோலி சொல்வது போல.. முதல் மேட்ச் தோல்வி அடைந்ததும் அப்படித்தான் இருக்கும். பின்னர் அதுவே போக போக சரியாகிவிடும் என்று கூறுவது போல இவர் மீம்போட்டுள்ளார்.

புதிய கேப்டன்
ஆர்சிபியின் புதிய கேப்டன் டு பிளசிஸ் நேற்று மிகவும் சிறப்பாக ஆடினார். நன்றாக கேப்டன்சியும் செய்தார். ஆனாலும் அந்த அணி தோல்வி அடைந்துவிட்டது. சிஎஸ்கேவில் கோப்பையை வென்று கொடுத்த டு பிளசிஸ் இப்படி முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்ததை வைத்தும் பலர் மீம் போட்டுவருகிறார்கள் . அதெல்லாம் மறந்துடு என்று கோலி டு பிளஸிஸுக்கு அறிவுரை சொல்வது போல இந்த மீம் வெளியிடப்பட்டுள்ளது.

கவலை படாதீங்க
முக்கியமாக ஆர்சிபி அணியின் பவுலிங்கை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 200க்கும் மேல் அடித்தும், அதை கூட டிபன்ட் செய்ய முடியாமல் ஆர்சிபி பவுலர்கள் திணறி உள்ளனர். அதிலும் நேற்று பல வைட் பந்துகளை ஆர்சிபி அணி வீசியது குறிப்பிடத்தக்கது.

கோலி
கோலியின் கேப்டன்சி சரியில்லை, அவர் பவுலர்களை கையாளும் விதம் சரி இல்லை என்று கடுமையான விமர்சனங்கள் இருந்தன. இதனால் டு பிளசிஸ் உள்ளே கொண்டு வரப்பட்டு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார் . ஆனால் அவரும் நேற்று பவுலர்களை சரியாக கையாளவில்லை. இதை பலர் கலாய்த்து மீம் வெளியிட்டுள்ளனர்.

ஆர்சிபி சாபம்
நேற்று அதிலும் பெங்களூர் அணியின் தோல்வியை பலரும் விமர்சனம் செய்தனர். என்னதான் பெங்களூர் அணியில் டு பிளசிஸ் கேப்டனாக இருந்தாலும், தினேஷ் கார்த்திக் நன்றாக ஆடினாலும் அது ஆர்சிபி அணி. அதில் எவ்வளவு ரன்கள் அடித்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஜெயிக்க முடியாது என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications