மேற்பரப்பை சுரண்டிவிட்டு சாலைகள் போடுங்கள்.. தரமான சாலைக்கு இறையன்பு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் புதிய சாலைகள் போடுவது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தமிழக தலைமைச் செயலாளர் வெ இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறுகையில் சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போட வேண்டும். மேற்பரப்பைச் சுரண்டிவிட்டு சாலை போடுவது வீடுகளுக்குள் நீர் புகாமல் தடுக்கும்.
எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக் கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சாலைகள் போதிய கனத்துடன் இருப்பதால் பிபிடி சோதனை தேவையில்லை என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் இறையன்பு.

தரமில்லாத சாலை
ஒவ்வொரு முறையும் சாலைகளை அமைக்கும் போதும் ஏற்கெனவே உள்ள சாலை மீதே புதிய சாலைகள் போடப்படுகின்றன. இதனால் சாலைகள் தரமில்லாதவையாக உள்ளன. மேலும் சாலைகளின் உயரம் அதிகரித்து வீடுகளின் உயரம் குறைகிறது. இதனால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதை உணர்ந்தே இறையன்பு இது போன்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இறையன்பு
நேர்மையான அதிகாரியான இறையன்பு கடந்த ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டிருந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இது போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு நல்ல பதவிகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

நூல்கள்
இவர் நேற்று முன் தினம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி எனது நூல்களை பரிசளிக்க வேண்டாம். என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ விநியோகிக்க வேண்டாம்.

களங்கம்
பூங்கொத்துக்கு பதிலாக எனது நூல்களை விநியோகிக்க வேண்டாம். தலைமை செயலாளராக பணியாற்றும் வரை எனது நூல்களை எந்த அழுத்தம் வந்தாலும் வாங்கக் கூடாது. பார்ப்பவர்களுக்கு எனது பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டு இருப்பதாக தோன்றி களங்கம் விளைவிக்கும்.
Recommended Video

பதவி
எந்த வகையிலும் என் பெயரோ, பதவியோ தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதே எனது நோக்கமாகும். வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் அதிகாரியிடம் வசூலித்து அரசு கணக்கில் செலுத்தப்படும் என அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications