ஆஹா.. அதிமுக, அமமுக ஒன்னா சேரப் போகுதோ.. புதிய பரபரப்பு
அதிமுகவுடன் அமமுக இணையுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: பிரிந்தவர்கள் திரும்பவும் இணைய போகிறார்களா? அதிமுகவும் - அமமுகவும் கூடிய சீக்கிரம் சேரப்போகிறதா?
அதிமுகவிற்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஆனால் ஏதோ சுமூக தீர்வுக்கு காய் நகர்த்தி வருகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. ஜெயலலிதா இறந்ததிலிருந்து டிடிவியும், முதல்வர் எடப்பாடி தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
ஆனாலும் திமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு இவர்கள் இருவருக்குமே தற்போது இல்லை. குறிப்பாக ஆளும் தரப்பு மீது மக்கள் அதிருப்தியாகத்தான் உள்ளனர். அது தற்போது கஜா புயல் பார்வையிட சென்றபோது இன்னும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது.

இணைவார்களா?
அதேபோலதான் டிடிவி தினகரனும். எவ்வளவோ முட்டி மோதியும் தோல்வி முகம்தான் கிடைத்து வருகிறது. தேர்தலும் நெருங்கி வருகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் பிரிந்தவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று இரு தரப்பிலுமே உணர தொடங்கியுள்ளனர்.

தங்க.தமிழ்செல்வன்
அதனால் அமமுகவும் அதிமுகவும் ஒருவரை ஒருவர் கட்சியில் இணையும்படி மறைமுகமாக அழைப்பு விடுத்து வருகின்றனர். "அதிமுக, அமமுக இரு கட்சிகளும் வேறல்ல. இரு கட்சிகளும் இணைந்தால் நல்லது தான். திமுகவை எதிர்ப்பதற்காக எல்லா கசப்பான நிகழ்வுகளையும் மறந்து அமமுகவுடன் இணையுங்கள்" என்று தங்க தமிழ்செல்வன் கூறியிருந்தார்.

கடம்பூர் ராஜூ பதில்
இதற்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, "அதிமுக என்பது, திமுக கருணாநிதி தீய சக்தி என்று வர்ணித்து தொடங்கப்பட்ட கழகம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் யாருடைய துணையுமின்றி திமுக-வை எதிர்த்த வலிமை அதிமுகவுக்கு உள்ளது. இந்த நிலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஏற்கனவே அறிவித்தது போல் பிரிந்து சென்றவர்கள் தானாக வந்து சேர்ந்தால் அவர்களை சேர்த்துக் கொள்ள தயாராக உள்ளோம்" என்றார்.

கூட்டுக்கு திரும்பும் பறவைகள்
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நமது அம்மா நாளிதழ் இன்று "கூட்டுக்கு திரும்பும் பறவைகள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், "பாதை மாறிப்போன பாசப்பறசைவகள் எல்லாம் பச்சிலையாம் ஈரிலை இயக்கம் நோக்கி, பழி துடைத்து திரும்புவதாக" கூறப்பட்டுள்ளது.

மா.செ.கூட்டம்
இந்நிலையில், சென்னையில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தகூட்டம் நடக்க உள்ளது. இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

சாத்தியம் உருவாகுமா?
அதிமுக பொதுக்குழு தேதி முடிவு செய்வது குறித்தும், 20 தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. என்றாலும், அதிமுக, அமமுகவின் அடுத்தடுத்த நிகழ்வுகளை பார்க்கும்போது, இந்த கூட்டத்தில் இரு அணிகள் ஒன்றிணைப்பு நடக்கும் சாத்தியம் உருவாகும் என்றே கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications