Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் உரிமை தொகை செக்.. தமிழக தேர்தல் தாமதமாக நடக்க காரணமே இதுதான்? ‘உரிமைத் தொகை’ பாலிடிக்ஸ்?!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத் தேர்தல் களம் இப்போது அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்திலேயே தேர்தல் முடிந்து.. வாக்குப் பெட்டிகள் லாக் ஆகிவிடும். ஆனால், இந்த முறை ஏப்ரல் 23-ம் தேதி வரை 'வெயிட்டிங் லிஸ்ட்'டில் வைக்கப்பட்டிருக்கிறது தமிழகம். இதற்குப் பின்னால் ஒரு பெரிய 'பணப் பாசம்' இருப்பதாக அரசியல் கழுகுகள் வட்டமிடுகின்றன.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும், மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாமில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும்.

tamil nadu assembly elections 2026 mk stalin dmk

அசாம் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்

கேரளா சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்

மேற்கு வங்கத்தில், ஏப்ரல் 23 (முதற்கட்டம்) மற்றும் ஏப்ரல் 29 (இரண்டாம் கட்டம்) ஆகிய இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ. 5,000 தந்த 'திடீர்' இன்ப அதிர்ச்சி!

கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, தமிழகத்து இல்லத்தரசிகளின் போன்களுக்கு ஒரு மெசேஜ் டக் டக் என வந்து விழுந்தது. 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதங்களுக்கான முன் பணம் மற்றும் கோடைகால சிறப்புத் தொகை என மொத்தம் ரூ. 5,000 ஒரே அடியாக வரவு வைக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் பணம் தருவதில் சிக்கல் வரும் என்பதால், முன்கூட்டியே இந்த மாஸ்டர் பிளானை அரங்கேற்றியது ஆளும் திமுக கட்சி.

எதிர்க்கட்சிகளின் 'ரிவெஞ்ச்' மூவ்?

"பணம் கொடுத்த சூடு ஆறுவதற்குள் தேர்தலை நடத்தினால் ஆளுங்கட்சிக்கு அது சாதகமாகிவிடும்" என்பது தான் எதிர்க்கட்சிகளின் கணக்கு. இதற்காகத்தான் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க தரப்பில், "பணம் கொடுத்த தாக்கம் மக்கள் மனதிலிருந்து குறையும் வரை தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்" எனத் தேர்தல் ஆணையத்திடம் ரகசியக் கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகத் தகவல்கள் கசிகின்றன.

தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் மார்ச் 9-ம் தேதி இரண்டு மாதங்களுக்கான உரிமைத் தொகை வழங்கப்பட்டது.

70 நாள் கணக்கு... எடுபடுமா?

இந்தத் தேர்தல் தேதியைப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது:

தமிழ்நாடு: பிப்ரவரி 13-ல் பணம் வழங்கப்பட்டது. ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு. அதாவது, பணம் கைக்கு வந்து சரியாக 70 நாட்கள் கழித்துதான் மக்கள் ஓட்டுப் போடப் போகிறார்கள்.

புதுச்சேரி: மார்ச் 9-ல் பணம் வழங்கப்பட்டது. அங்கே வாக்குப்பதிவு நடக்கும்போது சரியாக 27 நாட்கள் தான் ஆகியிருக்கும்.

"70 நாட்களில் அந்தப் பணத்தின் ஞாபகம் மக்கள் மனதில் இருக்குமா? அல்லது கோடை வெயிலோடு வெயிலாக அந்தப் பாசம் ஆவியாகிவிடுமா?" என்பதுதான் இப்போது அறிவாலயத்தின் கவலை. அதேநேரம், "புதுச்சேரியில் 27 நாட்களில் தேர்தல் நடப்பதால் அங்கே ஆளுங்கட்சிக்கு 'பாசிட்டிவ்' ஆக இருக்குமே?" என அங்கிருக்கும் எதிர்க்கட்சிகள் முணுமுணுக்கின்றன.

மேற்கு வங்கத்தில் தேர்தல் கட்டங்களைக் குறைத்த ஆணையம், தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த 39 நாள் 'கேப்' விட்டது என்பதற்குப் பின்னால் இருக்கும் இந்த 'பொருளாதாரப் போர்' இப்போதுதான் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+