பொங்கல் பண்டிகை ஹாலிடே ஓவர்! அடுத்தது பிப்ரவரியில் தொடர் விடுமுறை எப்போது?
சென்னை: பொங்கல் விடுமுறை இன்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்த தொடர் விடுமுறை எப்போது என்ற ஆவல் மக்களிடையே தொற்றிக் கொண்டது.
இதனால் தற்போது காலண்டரை புரட்டத் தொடங்கிவிட்டார்கள். ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு பலர் சென்று வருகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களிலும் இவர்கள் செல்கிறார்கள்.

அதிலும் லாங் வீக் எண்ட் வந்துவிட்டால் சின்ராஜை கைலயே பிடிக்க முடியாது என்பதை போல் அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் , ஐடி ஊழியர்கள் உள்ளிட்டோரையும் கையிலேயே பிடிக்க முடியாது என சொல்லலாம்.
அந்த அளவுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லவும் சுற்றுலா செல்லவும் திட்டமிடுவார்கள். கடந்த ஆண்டு ஆயுத பூஜை விடுமுறையும் இப்படித்தான் வீக் எண்ட்டிற்கு பிறகு வந்ததால் தொடர் விடுமுறை கிடைத்தது. அது போல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையும் அப்படித்தான்.
பொங்கல் பண்டிகை 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையடுத்து 15 ஆம் தேதி மாட்டு பொங்கல், 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 13 ஆம் தேதி போகி பண்டிகை என கொண்டாடப்பட்டது. இதனால் 11, 12 சனி, ஞாயிறு விடுமுறையாகும்.
இதனால் பொங்கலுக்கு 11, 12, 13, 14, 15, 16 என 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது. மேலும் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை விடுமாறு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் 17ஆம் தேதியும் விடுமுறை என்பதால் 18, 19 சனி, ஞாயிறு என சேர்த்து மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைத்தது.
இதனால் மக்கள் சொந்த ஊர்களிலும் சுற்றுலா தலங்களிலும் ஆன்மீக தலங்களிலும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்த நிலையில் இன்று வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அடுத்த தொடர் விடுமுறை எப்போது என பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
அந்த வகையில் ஜனவரி 26ஆம் தேதி திங்கள்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை வராமல் ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டதால் ஐயோ என கடுப்பாகிவிட்டார்கள். அடுத்த மாதம் பிப்ரவரி மாத காலண்டரை பார்த்ததும் குஷியாகிவிட்டார்கள்.
ஆம் அடுத்த மாதம் தைப்பூசம் அன்று அரசு விடுமுறை. அது செவ்வாய்க்கிழமை வருகிறது. எனவே திங்கள்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டால் போதும் சொளையாக சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
இதை விட்டால் அத்துடன் மார்ச், ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்தப்படும். எனவே மே மாதம்தான் சொந்த ஊர்களுக்கோ சுற்றுலா செல்லவோ திட்டமிட முடியும். இதனால் இந்த தைப்பூச விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க பலர் திட்டமிட்டு வருகிறார்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications