சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 வாரம் முன்.. ஓபிஎஸின் “மாஸ்டர் மூவ்” - வெற்றி காரணமே இதாங்க! அடித்து சொல்லும் ரத்தத்தின் ரத்தங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படும் நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக அவர் எடுத்து முக்கிய நகர்வும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி... OPS ஆதரவாளர்கள் கொண்டாட்டம் *Politics

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் தடைகள், வழக்குகள், போராட்டங்களை கடந்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது. அதில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பாத்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

    தப்புவாரா எடப்பாடி? ஓபிஎஸ் மலைபோல் நம்பிய வழக்கு - 4ம் தேதி விசாரிக்கும் உயர்நீதிமன்றம்தப்புவாரா எடப்பாடி? ஓபிஎஸ் மலைபோல் நம்பிய வழக்கு - 4ம் தேதி விசாரிக்கும் உயர்நீதிமன்றம்

    ஓபிஎஸ் வழக்கு

    ஓபிஎஸ் வழக்கு


    இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    ஐகோர்ட் உத்தரவு

    ஐகோர்ட் உத்தரவு

    இந்த நிலையில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட்டார். அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், ஜூலை 23க்கும் முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

    மீண்டும் பழைய நிலை

    மீண்டும் பழைய நிலை

    சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவினால் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போயுள்ளது. எனவே இனி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லாது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    வெற்றிக்கான காரணம்

    வெற்றிக்கான காரணம்

    இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அவர்கள் முன்வைத்த வாதங்கள். அடுத்த காரணமாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சொல்வது விசாரணை அமர்வை மாற்றியதுதான் என்கிறார்கள். இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில், வேறு நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கை ஏற்கப்பட்ட ஜெயச்சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்ததையும் வெற்றிக்கான காரணமாக பார்க்கிறார்கள் ஆதரவாளர்கள்.

    English summary
    Is Transferring the case to Jayachandran bench is the reason for OPS victory? ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது ஓபிஎஸுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படும் நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக அவர் எடுத்து முக்கிய நகர்வும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X