"க்ளைமேக்ஸ்" வந்தாச்சு போல.. ஜெ.வுக்கு பறந்த "ரகசிய" மெசேஜ்.. சசிக்கு கூடும் பலம்.. அப்ப எடப்பாடி?
திவாகரன் இன்றைய தினம் சசிகலா மற்றும் அதிமுக பற்றி பேட்டி தந்துள்ளார்
சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்த செய்தி ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது.. இது எத்தகைய மாற்றத்தை அதிமுகவுக்குள் ஏற்படுத்த போகிறது என்பது எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான நன்மதிப்பு இருக்கவே செய்கிறது.. திமுக அரசை துணிந்து எதிர்த்தது முதல் இதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதில் ஒரு காரணம்தான் சசிகலா.. கடந்த காலங்களில், சசிகலாவை மிக மோசமாகவும், கடுமையாகவும் விமர்சித்து வந்தவர் ஜெயக்குமார்..

சைலண்ட்
எடப்பாடியே சைலண்டாக இருந்தாலும், அவரைவிட அதிகமாக சீறியவர் ஜெயக்குமார்.. இதெல்லாம் கணக்கு போட்டுதான், ஜெயக்குமாரை மனதில் வைத்து ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்க எடப்பாடி நிறைய பிளான்களை போட்டு வைத்தார்.. குறிப்பாக, கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கவும் யோசித்து வைத்திருந்தார். அதனால்தான் எம்பி பதவியை ஜெயக்குமாருக்கு தராமல், தன்னுடைய இன்னொரு ஆதரவாளரான சிவி சண்முகத்துக்கு வழங்கினார் எடப்பாடி..

ஜெயக்குமார்
அதனால்தானோ என்னவோ, வழக்கத்தைவிட அதிகமாக, சசிகலாவை சீண்ட ஆரம்பித்துவிட்டார்.. இந்த விஷயமெல்லாம் தெரிந்து சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் கொந்தளித்து விட்டனராம்.. சசிகலாவின் சகோதரர் திவாகரன் சமீபகாலமாகவே, சசிகலாவிற்கு ஆதரவாக இருந்து வருகிறார்.. ஜெயக்குமார் இப்படி பேசி கொண்டிருப்பதை பார்த்து, அதிர்ந்து போயுள்ளார்.. அதிமுகவில் உள்ள சில சோர்ஸ்கள் மூலம் தனது கோபத்தையும் ஜெயக்குமாருக்கு பாஸ் பண்ணியுள்ளாராம் திவாகரன்..

எடப்பாடி ஷாக்
அதாவது, சசிகலா விஷயத்தில் ஜெயக்குமாரை அடக்கி வாசிக்க சொல்லியிருப்பார் என்கிறார்கள்.. ஜெயக்குமாரையும் ஆஃப் செய்துவிட்டால், மிச்சமிருப்பது எடப்பாடி பழனிசாமி மட்டுமே ஆவார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு பேட்டி தந்துள்ளார் திவாகரன்.. அந்த பேட்டியில், மறைமுகமாக எடப்பாடிக்கும் ஒரு செக் வைத்து கலங்க வைத்துள்ளார்.. திவாகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது:

பொதுச்செயலாளர்
சசிகலா கட்சியில் சில எதிர்பார்ப்புகளையும், சில நகர்வுகளையும் செய்து வருகிறார். அவர் அதிமுக பொதுச்செயலாளராக இருக்கிறாரோ இல்லையோ, அவர் தான் பொதுச்செயலாளர் என்று பொதுக்குழு உறுப்பினர்களின் தீர்மானத்தை இன்னும் பெரும்பாலான அதிமுகவினர் ஏற்று கொண்டுள்ளார்கள்... ஆறுமுகசாமி விசாரணை முடிவுற்றது... ஆனால், அறிக்கை வெளிவரவில்லை. இதை நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.. ஏனென்றால் அநியாகமாக பல உயிர்கள் பலியாகி விட்டது.

எடப்பாடி பழனிசாமி
சசிகலாவின் அடுத்த முடிவு எப்படி இருக்கும்? அவர் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க போகிறார்? சிதறி கிடக்கும் அதிமுகவை சீரமைக்க முயன்றால் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்... சசிகலாவின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். சசிகலா ஒரு பெண்... எனவே அவரை சுற்றி இருப்பவர்கள் நல்ல செய்திகளை சொல்லி கொடுக்க வேண்டும்.. சசிகலா தலைமையில் புதிய தலைமை ஏற்படுத்த ஒரு சிலரை தவிர அதிமுகவில் பெரும்பாலானோர் தயாராக இருக்கின்றனர்.

கலக்கம்
சசிகலாவின் நோக்கம் அதிமுகவை கைப்பற்றுவது... இதற்கு காலம் பதில் சொல்லும். அதிமுகவில் இருந்து கொண்டு சம்பாதித்தவர்கள் ஒரு போதும் அதிமுக கட்சிக்கு துரோகம் செய்ய கூடாது... அதிமுகவிற்கு தற்போது சோதனையான நேரம். இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டுமே தவிர இயக்கத்தை அழிக்க கூடாது. அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதற்கு உண்மையான அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும்" என்று திவாகரன் கூறியுள்ளார்.. எடப்பாடியை குறி வைத்தே இந்த பேட்டி தரப்பட்டுள்ளது, அவரது தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறதாம்..!
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications