தீபாவளிக்கு பிறகு.. அடுத்த சிம்பொனி! அறிவிப்பை வெளியிட்ட இசைஞானி இளையராஜா
சென்னை: தீபாவளி வாழ்த்துகளை வீடியோ மூலம் பகிர்ந்துக்கொண்ட பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, தீபாவளி மற்றும் தனது தாயாரின் நினைவு தினத்திற்கு பிறகு புதிய சிம்பொனியை எழுத உள்ளதாக அறிவித்திருக்கிறார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் லண்டனில் உள்ள ஈவன்டிம் அப்பல்லோ அரங்கத்தில் தனது 'வேலியண்ட்' எனும் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த சிம்பொனி குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தீபாவளி நாளில் ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். எனது அடுத்த சிம்பொனியை எழுத இருக்கிறேன்.
Happy Deepavali everyone! pic.twitter.com/uXpJH1hMbq
— Ilaiyaraaja (@ilaiyaraaja) October 20, 2025
அத்துடன் புதிய படைப்பாக சிம்பொனி டான்சர்ஸ் என்ற புதிய இசைக் கோர்வையை எழுத இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளி நற்செய்தியாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications