ஐ ஆம் சாரி ஐயப்பா! இது ஐயப்பன் பாடலே இல்லீங்க! கானா பாடகி இசைவாணி விளக்கம்
சென்னை: நான் பாடியது ஐயப்பன் பாடலே இல்லை. பெண்களின் உரிமைகளை பட்டியலிடும் பாடல்தான் அது என கானா பாடகி இசைவாணி தெரிவித்துள்ளார்.
பிரபல கானா பாடகி இசைவாணி, இயக்குநர் பா ரஞ்சித் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்திய நிகழ்ச்சியில் ஐயம் சாரி ஐயப்பா என்ற பாடலை பாடினார். இந்த பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். இந்த பாடல் சமூகவலைதளங்களில் டிரென்டானது.

இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பாடகி இசைவாணியையும் இயக்குநர் பா ரஞ்சித்தையும் கைது செய்யக் கோரி புகாரும் அளிக்கப்பட்டுள்ளன. நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்களை தவறாக பேசினார் என்பதற்காக அவரை கைது செய்தது போல் இசைவாணியை கைது செய்யாதது ஏன் என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் இசைவாணிக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இசைவாணி, தான் பெரியாரின் பேத்தி என பல இடங்களில் பதிவு செய்துள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்ட போது கூட இசைவாணி கண்ணீர் விட்டு கதறினார்.
பிறகு அவருக்காக இரங்கல் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது கூட அவர் நாதழுதழுக்க பாடினார். ஐயப்பன் குறித்து பாடிய பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஐ ஆம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா.. பயம்காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா.. நான் தாடிக்காரன் பேத்தி! இப்போ காலம் மாறிப்போச்சி என இசைவாணி பாடிய பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மதத்தை இசைவாணி கொச்சைப்படுத்திவிட்டார் என அவருக்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். அரசு அவரை கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என பாஜக வழக்கறிஞர் அணியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து இசைவாணி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் முதலில் அந்த சர்ச்சைக்குரிய பாடலை பாடிக் காட்டினார். பிறகு அவர் கூறுகையில் இது ஐயப்பனை பற்றிய பாடலே கிடையாது. அதாவது பெண்களுக்கான உரிமைகள் குறித்த பாடல்தான் அது.
பெரியாரின் பாடல் இது. நிறைய பேர் நான் ஐயப்பனை தவறாக பாடிவிட்டேன் என்கிறார்கள். ஐயம் சாரி ஐயப்பா, நான் உள்ளே வந்தா என்னப்பா என்ற ஒரு வரியைத்தான் பயன்படுத்தியுள்ளேன். அந்த இரு வரிகளை தவிர்த்து பெண்களின் உரிமைகள் குறித்துதான் முழு பாடலும் உள்ளது.
ஆனால் யாருமே அந்த வரிகளை பற்றி பேசவில்லை, முதல் இரு வரிகளைத்தான் பேசுகிறார்கள் என இசைவாணி தெரிவித்துள்ளார்.
-
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications