வக்பு வாரியம் கலைப்பும்.... நிர்வாக குளறுபடியும்...!
சென்னை: வக்பு வாரியம் கலைக்கப்பட்டது முதல் அதன் நிர்வாக செயல்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
வசதி படைத்த இஸ்லாமியர்கள் தங்கள் சொத்தில் சில பங்கை சமுதாய மக்களுக்காகவும், பள்ளிவாசல்களின் வருமானத்துக்காகவும், தானமாக வழங்குவது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் வழக்கமாகும். அப்படி வழங்கப்படும் சொத்துக்களை கண்காணித்து நிதி நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல், தர்ஹாக்களில் ஏற்படும் நிர்வாக பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் வக்பு வாரியம்.

இந்நிலையில் தமிழக வக்பு வாரியம் கலைக்கப்பட்டுள்ளதால் அதன் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதாகவும், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் சில ஆக்கிரமிப்பாளர்கள் கைக்கு செல்வதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனை தடுக்க மீண்டும் வக்பு வாரியத்திற்கு தலைவர், உறுப்பினர்கள் என அனைவரையும் நியமித்து அதனை செயல்பட வைக்க வேண்டும் என, அபுபக்கர் எம்.எல்.ஏ, தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, போன்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், வக்பு வாரியத்தை மீண்டும் கட்டமைக்கும் திட்டம் தமிழக அரசுக்கு இல்லை என்பது அதன் நடவடிக்கைகளில் இருந்தே தெரிகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்தீக்கை வக்பு வாரிய நிர்வாக அதிகாரியாக தமிழக அரசு நியமனம் செய்த நிலையில், அதற்கு நீதிமன்றம் மூலம் தடை பெற்றார் வழக்கறிஞர் அஜ்மல் கான். இப்படி குழப்பங்கள் சூழந்த வாரியமாக வக்பு வாரியம் மாறிவிட்டது. இதனா பல பள்ளிவாசல்களிலும், தர்ஹாக்களிலும் எழுந்துள்ள நிர்வாக பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாத நிலை உருவாகியுள்ளது.
அதிமுக எம்.பி.யாக உள்ள முன்னாள் அமைச்சர் முகமது ஜானை தலைவராக கொண்டு வக்பு வாரியம் செயல்பட்டால் கூட தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும், தடையின்றி வக்பு வாரியம் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என்பதே முக்கியம் எனவும் தெரிவிக்கிறார் மனித நேய ஜனநாய கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications