5 ஏக்கர் நிலம்னு சொன்னீங்க! இப்ப வெறும் 50 ஆயிரம்தானா? இது நம்பிக்கை துரோகம் விஜய்! நயினார் கண்டனம்
சென்னை: தவெக ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீதம் பயிர்க் கடன் ரத்து என கூறிவிட்டு, தற்போது வெறும் ரூ 50 ஆயிரம் பயிர்க் கடன் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே 100 சதவீதம் கடன் தள்ளுபடி செய்துள்ளீர்கள், இது அப்பட்டமான நம்பிக்கை துரோகமில்லையா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "விவசாயிகளை நம்ப வைத்து ஏமாற்றியவர் ஜோசப் விஜய். ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் 100% பயிர்க்கடன் ரத்து என்று கூறிவிட்டு, தற்போது வெறும் ₹50,000 பயிர்க்கடன் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே 100% கடன் தள்ளுபடி செய்துள்ளீர்களே, இது அப்பட்டமான நம்பிக்கை துரோகமில்லையா?.

இதேபோலத் தான் தேர்தலின் போது அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் 500 யூனிட்டிற்கு கீழ் உபயோகித்தால் மட்டுமே என "இக்" வைத்தீர்கள்.
எதற்கு இத்தனை பித்தலாட்டங்கள்? இத்தனை பொய் வாக்குறுதிகள்? ஆசை காட்டி அப்பாவி மக்களை ஏமாற்றுமளவிற்கு முதல்வர் பதவி மீது உங்களுக்கு அப்படியென்ன வெறி?. காற்றில் கோட்டை கட்டுவது போல, நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றவே முடியாத வெறும் வாய் வார்த்தைகள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இதுதான் உங்கள் மாற்று அரசியலின் லட்சணமா?
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி, 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன்களையும் தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையேல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் இணைந்து தமிழக பாஜக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
குறு விவசாயிகள் ரூ 50 ஆயிரம் வரை பெற்ற விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் விஜய் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ 50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக வேளாண் துறை அமை்சர் வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், நிதி அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான முழுத் தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும் தமிழக அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 1.5.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்கண்டவாறு தள்ளுபடி செய்ய முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
-
தவெக பதவியேற்று 15 நாளானால் என்ன? இப்போதைக்கு விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா அதிரடி! -
நாளை முதல் முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்! பயண திட்டம் என்ன? யாரையெல்லாம் சந்திக்கிறார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications