Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முழுமையாக செயல்பட தொடங்கியது ஆதித்யா எல் 1.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்! இஸ்ரோ கொடுத்த முக்கிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் மேக்னட்டோமீட்டரின் சென்சார் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியுள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ தொலைவில் சூரியன் இருக்கிறது. என்னதான் இவ்வளவு தொலைவில் இருந்தாலும் பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு இதன் ஒளி அவசியமாக இருக்கிறது. சிம்பிளாக சொல்வதெனில், மனிதர்கள் காய்கறிகளையும், இறைச்சியையும் சாப்பிடுகிறார்கள். காய்கறிகள் செடி, மரத்திலிருந்து நமக்கு கிடைக்கிறது. செடி, மரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் வளர்கிறது. இதற்கு சூரிய ஒளி முக்கியம். எனவே நாம் சூரியனுடன் தொடர்ந்து கனெக்டிங்கில் இருக்க வேண்டியது அவசியம்.

ISRO has announced that the Aditya spacecrafts magnetometer sensor has started working successfully

மரம், செடி, கொடி, ஒளிச்சேர்க்கை இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் மறைமுகமாக சூரியன் பல்வேறு வகையில் நமக்கு உதவிக்கொண்டே இருக்கிறது. ஒருவேளை சூரியன் இல்லையெனில், நம்முடைய பூமி இந்த சூரிய குடும்பத்தை விட்டு விலகி விண்வெளியில் காணாமல் போய்விடும். இப்படி நடந்தால் உடனடியாக நமது உலகம் அழிந்துபோய்விடும். ஆக சூரியன் தனக்காக வாழ்வதை விட பூமிக்காகவே அதிகமாக வாழ்ந்து வருகிறது. ஆனால் இப்படி சமத்து பிள்ளையாக இருக்கும் இது, பல நேரங்களில் (சூரிய) குடும்பத்தையே இரண்டாக பிளக்கும் வேலைகளை செய்துவிடுகிறது.

அதாவது குறிப்பிட்ட சில நேரங்களில் சூரியன் காந்த புயல்களை வெளி கக்குகிறது. இந்த புயல் பூமியை தொட்டால் சோலி முடிஞ்ச்! இந்த காந்த புயல்கள் செல்ஃபோன் தொடங்கி, டிவி, கம்பயூட்டர் என எல்லா எலக்ட்ரிக் சாதனங்களை முற்றிலுமாக செயலிழக்க வைத்துவிடும். இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க எலக்ட்ரிக் சாதனங்களைதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். இதுமட்டும் கிடையாது, இந்த புயலிலிருந்து ஒரேயொரு செயற்கைக்கோள் கூட தப்பிக்காது. எல்லாம் பூமியை நோக்கி 'தொப்' என விழுந்துவிடும். எங்கு விழுகிறது என்பதை கணிக்கவே முடியாது.

ஆக இந்ந புயல்களை முன் கூட்டியே கணிக்க உலக நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. அமெரிக்க சூரியனுக்கு மிக நெருக்கமாக செயற்கைக்கோளை ஏவி ஆய்வு செய்து வருகிறது. இந்த விஷயத்தில் நமது இஸ்ரோ தற்போதுதான் 'அ, ஆ'வை போட்டு கணக்கை தொடங்கியிருக்கிறது. அதாவது சூரியனை ஆய்வு செய்ய நாம் முதன் முதலில் கடந்த ஆண்டுதான் ஆதித்யா எல்-1 எனும் விண்கலத்தை அனுப்பியிருக்கிறோம். இது சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுகளை செய்யும்.

இந்த விண்கலம் 127 நாட்கள் பயணித்து, பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்'(எல்-1) எனும் இடத்தில், சூரியனை பார்த்தவாறு சமீபத்தில்தான் நிலை நிறுத்தப்பட்டது. ரூ500 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டு இந்த விண்கலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சூரியன் குறித்த தகவல்களை அனுப்ப தொடங்கியுள்ளது.

அதேபோல அண்டத்தின் காந்த புலத்தை அறிவதற்காக பொருத்தப்பட்டிருந்த மேக்னட்டோ மீட்டர் தற்போது வெற்றிகரமாக செயல்பட தொடங்கியுள்ளது. இந்த கருவி சூரியன் மற்றும் கிரகங்களின் காந்த புலத்தை அளவிடும். 132 நாட்களாக இயக்கப்படால் இருந்த மேக்னட்டோ மீட்டரின் ஆண்டனாக்கள் தற்போது இயக்க வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிரகத்திலும் எந்த அளவுக்கு காலந்த புலம் இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த கிரகம் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+