அப்பாடா.. முதல் ரவுண்டை முடித்த சந்திராயன் 3! மொத்தம் 5 ரவுண்டு - இஸ்ரோ வெளியிட்ட குட் நியூஸ்
சென்னை: நிலவை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்த சந்திராயன் 3 விண்கலம் முதல் சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பி சாதித்த ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் 4 வது நாடாக இடம்பிடிக்க கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறது இஸ்ரோ. 2008 ஆம் ஆண்டு நிலவை நோக்கி அனுப்பப்பட்ட சந்திராயன் 1 விண்கலம் தோல்வியடைந்தது.

அதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை நோக்கி ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலமும் ரோவர் கருவி தரையிறங்கும்போது மோதியதால் வெடித்து சிதறி தோல்வியடைந்தது. இருந்தும் மனம் தளராத இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 3 விண்கலத்தை உருவாக்கினர். கவுண்டவுன் நிறைவடைந்து நேற்று இந்த ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
நேற்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், நிலவின் இருண்ட பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டது. நிலவின் தெற்கு பகுதியில் இந்த சந்திராயன் 3 ஐ தரையிறக்குவது பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்கானித்து வருகிறார்கள். இந்த சந்திராயன் 3 விண்கலம் ஒரு மாதம் கழித்து வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து ஒரு சந்திர நாள் எனப்படும் சுமார் 14 நாட்கள் கழித்து சந்திராயன் 3 செயல்பட தொடங்கும் என்று கூறப்பட்டு உள்ளது. சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Chandrayaan-3 Mission update:
— ISRO (@isro) July 15, 2023
The spacecraft's health is normal.
The first orbit-raising maneuver (Earthbound firing-1) is successfully performed at ISTRAC/ISRO, Bengaluru.
Spacecraft is now in 41762 km x 173 km orbit. pic.twitter.com/4gCcRfmYb4
இந்த நிலையில் நிலவை நோக்கி இந்தியாவின் சாதனைப் பயணத்தை செய்துகொண்டு இருக்கும் சந்திராயன் 3 விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்த பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்கு சென்று அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கி தரையிறங்கும்.
இந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக முதல்முறை பூமியின் நீள் வட்டப்பாதையை சந்திராயன் 3 விண்கலம் சுற்றி வந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. விண்கலம் நல்ல நிலையில் இருப்பதாகவும் தற்போது 41762 km x 173 km ஆர்ப்பிட்டில் உள்ளது எனவும் இஸ்ரோ விளக்கி இருக்கிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications