அப்பாடா.. முதல் ரவுண்டை முடித்த சந்திராயன் 3! மொத்தம் 5 ரவுண்டு - இஸ்ரோ வெளியிட்ட குட் நியூஸ்
சென்னை: நிலவை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்த சந்திராயன் 3 விண்கலம் முதல் சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பி சாதித்த ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் 4 வது நாடாக இடம்பிடிக்க கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறது இஸ்ரோ. 2008 ஆம் ஆண்டு நிலவை நோக்கி அனுப்பப்பட்ட சந்திராயன் 1 விண்கலம் தோல்வியடைந்தது.

அதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை நோக்கி ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலமும் ரோவர் கருவி தரையிறங்கும்போது மோதியதால் வெடித்து சிதறி தோல்வியடைந்தது. இருந்தும் மனம் தளராத இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 3 விண்கலத்தை உருவாக்கினர். கவுண்டவுன் நிறைவடைந்து நேற்று இந்த ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
நேற்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், நிலவின் இருண்ட பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டது. நிலவின் தெற்கு பகுதியில் இந்த சந்திராயன் 3 ஐ தரையிறக்குவது பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்கானித்து வருகிறார்கள். இந்த சந்திராயன் 3 விண்கலம் ஒரு மாதம் கழித்து வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து ஒரு சந்திர நாள் எனப்படும் சுமார் 14 நாட்கள் கழித்து சந்திராயன் 3 செயல்பட தொடங்கும் என்று கூறப்பட்டு உள்ளது. சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Chandrayaan-3 Mission update:
— ISRO (@isro) July 15, 2023
The spacecraft's health is normal.
The first orbit-raising maneuver (Earthbound firing-1) is successfully performed at ISTRAC/ISRO, Bengaluru.
Spacecraft is now in 41762 km x 173 km orbit. pic.twitter.com/4gCcRfmYb4
இந்த நிலையில் நிலவை நோக்கி இந்தியாவின் சாதனைப் பயணத்தை செய்துகொண்டு இருக்கும் சந்திராயன் 3 விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்த பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்கு சென்று அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கி தரையிறங்கும்.
இந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக முதல்முறை பூமியின் நீள் வட்டப்பாதையை சந்திராயன் 3 விண்கலம் சுற்றி வந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. விண்கலம் நல்ல நிலையில் இருப்பதாகவும் தற்போது 41762 km x 173 km ஆர்ப்பிட்டில் உள்ளது எனவும் இஸ்ரோ விளக்கி இருக்கிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications