சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்புவதே ஆளுநர் தான்.. ஒரே போடாக போட்ட அமைச்சர் பொன்முடி
சென்னை: தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் ஆளுநராக செயல்படவில்லை என்றும், அவர் பிரதமரின் பிரதிநிதியாக செயல்படுகிறார் என்றும் பாஜகவை சேர்ந்தவர்களை வைத்து இந்த வேலைகளை செய்துவிட்டு இப்போது திமுக அரசின் மீது குற்றம் சுமத்துவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் ஆளுநராக செயல்படவில்லை. அவர் பிரதமரின் பிரதிநிதியாக செயல்படுகிறார். அதேபோல தான் மதுரை பல்கலைக்கழகத்தில் 101 வயது நிரம்பியுள்ள சங்கரய்யா அவர்களுக்கு, சுதந்திர போரிலே 9 ஆண்டு காலம் சிறையில் இருந்தவர் சங்கரய்யா.

சமூக நீதிக்காகவும், பொது உடைமைக்காகவும் குரல் கொடுத்த சங்கரய்யா அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழகமும், மதுரை செனட் கழகமும் சேர்ந்து தீர்மானம் அனுப்பி ஆளுநருக்கு அனுப்பினார்கள். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். அவர் சொன்ன பிறகு மீண்டும் அதனை ஆட்சி மன்றத்திலேயும் ஆட்சி மன்ற குழுவிலேயும் நிறைவேற்றி அனுப்பினர். அதற்கும் ஆளுநர் இதுவரை பதில் அளிக்கவில்லை. நவம்பர் 2ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.
ஆகவே இன்னும் 2 நாள் இருக்கிறது. எனவே அதற்குள் ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம். சுதந்திர போராட்டத்திற்காக பல தியாகங்களை செய்த சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் அளிக்கலாம். நவம்பர் 2ம் தேதிக்குள் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறோம். எல்லாவற்றிற்கும் தடையாக இருப்பவர் அவர் தான். தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார் இது கூட்டாட்சி நாடு என்று ஆனால் அதனை ஒற்றை ஆட்சியாக பார்ப்பதற்கு பாஜக முயற்சி செய்கிறது.
ஒரே நாடு ஒரே அரசு என்ற தலைப்பிலே அவர்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேற்றே தெளிவாக விளக்கியுள்ளார். இது ஆளுநருக்கும் புரியும் என்று நினைக்கிறேன். அவர் இதையெல்லாம் தெளிவாக புரிந்துகொண்டு தான் அவரே இன்றைக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்பிக்கொண்டு இருக்கிறார்.
அவரே சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்பிவிட்டு அவரே தற்போது இப்படி செய்து வருகிறார். பாஜகவை சேர்ந்தவர்களை வைத்து இந்த வேலைகளை செய்துவிட்டு இப்போது இந்த அரசின் மீது குற்றம் சுமத்தும் அளவிற்கு வந்துவிட்டார். இது மாநில உரிமைகளுக்கு உள்ள சவால் என்று முதல்வர் ஸ்டாலினே சொல்லிவிட்டார். இதனால் தான் நாங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications