செல்லாத நோட்டுக்கள் விவகாரம்.. சிறையிலிருந்து உறவினருக்கு கடிதம்.. வருமான வரித் துறை
சென்னை: செல்லாத நோட்டுக்கள் மூலம் தான் வாங்கிய சொத்துகள் குறித்து உறவினருக்கு கடிதம் எழுதியதாக வருமான வரித் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். 2017-ஆம் ஆண்டு நவம்பரில் அவர் சிறை சென்றவுடன் அவருடைய வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.
இதில் வருமான வரித் துறையினர் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் கடந்த 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா ரூ 1674.50 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.

சசிகலா உறவினர்கள்
அது போல் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ 237 கோடியை அவர் கடனாகவும் அளித்துள்ளார். இதுகுறித்து சிறையில் உள்ள சசிகலாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வருமான வரித் துறை
அப்போது அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துவிட்டார். சொத்துகளை வாங்கிக் குவிக்கவும் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு கடன் வழங்கவும் பயன்படுத்தப்பட்டது கணக்கில் வராத பணம் என்று ஏன் நாங்கள் அறிவிக்கக் கூடாது என கேட்டு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பினர்.

சசிகலா
இதற்கு ஆடிட்டர் மூலம் சசிகலா விளக்கம் அளித்துள்ளார். செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்து சொத்து வாங்கியதாகவும், ரூ.237 கோடி கடன் அளித்ததாகவும் கூறும் குற்றச்சாட்டை சசிகலா மறுத்தார்.

ஜெ. முதல்வர்
மேலும், முதல்வராக இருந்த ஜெயலலிதாவும், தானும் கோடநாடு எஸ்டேட் உள்பட பல சொத்துகளுக்கு பங்குதாரராக இருந்தநிலையில், அவரது மறைவுக்கு பிறகு தானே அனைத்து சொத்துகளுக்கும் உரிமையாளர் ஆகியிருப்பதாகவும் கூறியிருந்தார்.

தமிழில் கடிதம்
எனினும் சசிகலா சொத்துகளை வாங்கியதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2017-இல் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனின் வீட்டில் சோதனை செய்த போது தமிழில் எழுதிய சில கடிதங்கள் கிடைத்தன.

சசிகலா
அதுகுறித்து கேட்ட போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டு காவலாளியிடம் இந்த கடிதங்களை சீலிடப்பட்டு கொடுத்ததாக தெரிவித்தார். ஆனால் விசாரணையில் அந்த கடிதம் 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் பெங்களூர் சிறையிலிருந்து சசிகலாவினுடையது என தெரியவந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications