செல்லாத நோட்டுக்கள் விவகாரம்.. சிறையிலிருந்து உறவினருக்கு கடிதம்.. வருமான வரித் துறை
சென்னை: செல்லாத நோட்டுக்கள் மூலம் தான் வாங்கிய சொத்துகள் குறித்து உறவினருக்கு கடிதம் எழுதியதாக வருமான வரித் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். 2017-ஆம் ஆண்டு நவம்பரில் அவர் சிறை சென்றவுடன் அவருடைய வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.
இதில் வருமான வரித் துறையினர் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் கடந்த 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா ரூ 1674.50 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.

சசிகலா உறவினர்கள்
அது போல் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ 237 கோடியை அவர் கடனாகவும் அளித்துள்ளார். இதுகுறித்து சிறையில் உள்ள சசிகலாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வருமான வரித் துறை
அப்போது அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துவிட்டார். சொத்துகளை வாங்கிக் குவிக்கவும் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு கடன் வழங்கவும் பயன்படுத்தப்பட்டது கணக்கில் வராத பணம் என்று ஏன் நாங்கள் அறிவிக்கக் கூடாது என கேட்டு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பினர்.

சசிகலா
இதற்கு ஆடிட்டர் மூலம் சசிகலா விளக்கம் அளித்துள்ளார். செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்து சொத்து வாங்கியதாகவும், ரூ.237 கோடி கடன் அளித்ததாகவும் கூறும் குற்றச்சாட்டை சசிகலா மறுத்தார்.

ஜெ. முதல்வர்
மேலும், முதல்வராக இருந்த ஜெயலலிதாவும், தானும் கோடநாடு எஸ்டேட் உள்பட பல சொத்துகளுக்கு பங்குதாரராக இருந்தநிலையில், அவரது மறைவுக்கு பிறகு தானே அனைத்து சொத்துகளுக்கும் உரிமையாளர் ஆகியிருப்பதாகவும் கூறியிருந்தார்.

தமிழில் கடிதம்
எனினும் சசிகலா சொத்துகளை வாங்கியதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2017-இல் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனின் வீட்டில் சோதனை செய்த போது தமிழில் எழுதிய சில கடிதங்கள் கிடைத்தன.

சசிகலா
அதுகுறித்து கேட்ட போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டு காவலாளியிடம் இந்த கடிதங்களை சீலிடப்பட்டு கொடுத்ததாக தெரிவித்தார். ஆனால் விசாரணையில் அந்த கடிதம் 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் பெங்களூர் சிறையிலிருந்து சசிகலாவினுடையது என தெரியவந்தது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications