சாமியார்களுக்கு நேரம் சரியில்லை.. அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு தூக்க வருமான வரித் துறை திட்டம்?
ஆசிரமங்களில் நடக்க போகும் ஐடி ரெய்டுகள் இனி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Recommended Video
சென்னை: கல்கி சாமியாரைத் தொடர்ந்து மேலும் சில சாமியார்களுக்கு குறி வைக்கப்பட்டிருப்பதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். வரலாறு காணாத அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதால் இவர்களையும் அள்ள வருமான வரித்துறை திட்டமிட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது.
கல்கி பகவான் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சாமியார். இவரை ஒரு காலத்தில் தீவிரமாக பின் தொடர்ந்தவர்கள் பலர். பல்துறைப் பிரபலங்களும் இவர் பின்னால் அணிவகுத்தனர்.
ஆனால் அவரது ஆசிரமத்தில் ஏகப்பட்ட மோசடிகள், மோசமான வேலைகள் நடப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து கல்கி சிக்கலில் மாட்டினார்.

கல்கி ஆசிரமம்
அதன் பிறகு பல வருடம் அவரைப் பற்றிய தகவலே இல்லை. அமைதியாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் இப்போது கல்கி ஆசிரமத்தை பிரித்து மேய்ந்து கொண்டுள்ளனர் வருமான வரித்துறையினர். 500 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.

ரியல் எஸ்டேட்
கல்கி ஆசிரமம் பெயருக்குத்தான் ஆசிரமம் என்று உள்ளது. ஆனால் உண்மையில் ரியல் எஸ்டேட்தான் மிகப் பெரிய அளவில் தொழிலாக செய்து வந்துள்ளனர் கல்கி குடும்பத்தினர். அப்பாவி பக்தர்கள் கொண்டு வந்து கொட்டும் பணத்தையெல்லாம் எடுத்து தங்களது தொழிலை அபிவிருத்தி செய்துள்ளனர். ஊர் ஊராக நிலங்களை வாங்கி விற்று தொழில் செய்துள்ளனர்.

தப்பி ஓட்டம்?
மிகப் பெரிய அளவில் சொத்துக்கள் குவிந்ததால் வெளிநாட்டில் செட்டிலாகும் திட்டமும் இவர்களிடம் இருந்துள்ளது. கல்கி பகவானும், அவரது மனைவியும் கூட கடந்த 2 வருடமாக ஊரிலேயே இல்லையாம். வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாக ஒரு தகவல் உள்ளது. என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை. ஆனால், மிகப் பெரிய மோசடிக் கூட்டமாக கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது.

ஆசிரமங்கள்
இதற்கிடையே, தமிழகத்திலும் சில ஆசிரமங்கள், சாமியார்கள் மீது வருமான வரித்துறையின் கண் பார்வை விழுந்துள்ளதாம். குறிப்பாக பாஜகவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வோரின் பட்டியலை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாம்.

பாஜக அரசு
அடுத்தடுத்து இவர்களுக்கு ஆப்பு வைக்கப்படுமாம். இவர்களால் பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படுவதாக மத்திய அரசு கருதுகிறதாம். தமிழகத்தில் அடுத்தடுத்து வருமான வரித்துறை ரெய்டுகள் மீண்டும் படையெடுக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications