ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதே கேள்விக்குறிதான்.. வைகோ நக்கல்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதே கேள்விக்குறிதான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நக்கலடித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீங்கள் எப்போது கட்சித் தொடங்கப் போகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் அதற்கு என்ன அவசரம், இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்றார். ஏற்கனவே தனது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதே கேள்விக்குறிதான் என கூறினார்.
அவர்கள் இணைந்தால் யாராலும் அசைக்க முடியாது.. ரஜினி கமலை வைத்து பெரிய திட்டம் போடும் பாஜக!
மேலும் அவர் பேசியதாவது, ரஜினி அரசியலுக்கு வந்தாலும் திராவிட எஃகு கோட்டைக்கு எந்த சேதாரமும் வராது என்றும் வைகோ தெரிவித்தார்.
மேலும் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் மிகப்பெரிய வெற்றியை கொண்டுவந்துள்ளார்.நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதிமுக ஆட்சி கவிழும். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.