சிஏஏ போராட்டங்களை நடத்தியவர்! ஐயூஎம்எல்லின் முதல் பெண் வேட்பாளர்! ஹிஜாப் சர்ச்சைக்கு சைலன்ட் பதிலடி!
சென்னை: சென்னையில் சிஏஏவுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திய இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் முதல் பெண் வேட்பாளர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

21 மாநகராட்சிகள்
இந்த தேர்தலில் திமுக 21 மாநகராட்சிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. சென்னையில் 153 வார்டுகளை தன்வசமாகியது. அதிமுக 15 இடங்களை கைப்பற்றியது. திமக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வென்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களையும் சிபிஐ பாஜக தலா ஒரு இடத்திலும் வென்றது.

விடுதலைச் சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், ம.தி.மு.க. 2 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 2360 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 638 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய முஸ்லீம் லீக்
இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் முதல் பெண் வேட்பாளர் பாத்திமா முசாபர் திமுக கூட்டணியில் சென்னை மாநகராட்சியில் 61 ஆவது வார்டில் போட்டியிட்டார். அந்த வார்டில் கிடைத்த 11,443 வாக்குகளில் 6,347 வாக்குகள் பாத்திமா பெற்றுள்ளார். இவர் ஏணி சின்னத்தில் போட்டியிட்டார்.

55 ஆண்டுகள் கழித்து ஏணி சின்னம்
55 ஆண்டுகள் கழித்து இந்திய முஸ்லீம் லீக் கட்சி தனது ஏணி சின்னத்தை பயன்படுத்தி கட்சி வரலாற்றில் முதல் முறையாக பெண் வேட்பாளர் சென்னையில் போட்டியிட்டு வென்றுள்ளார். பாத்திமாவின் தந்தை அப்துல் சமத் துறைமுகம் பகுதியில் கடந்த 1958 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
Recommended Video

சிஏஏ போராட்டம்
பாத்திமா குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை நிறைய போராட்டங்களை நடத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு இது வரலாற்று சாதனை. நாங்கள் ஒரே ஒரு வார்டில் போட்டியிட்டு வென்றோம். தற்போது நடந்து வரும் ஹிஜாப் விவகாரத்திற்கு நான் கொடுத்த அமைதியான பதில் இது! நான் பொதுமக்களுக்கு சேவை செய்வேன். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பாலமாக இருக்க உதவுகிறேன் என்றார் அவர்.
-
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications