சித்த மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது... ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தகவல்
சென்னை: கொரோனா பாதிப்புக்கு இந்திய மருத்துவ முறையை அரசு நம்பவில்லை என்பது தவறான கருத்து என சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டில் கொரோனா வார்டை ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார். மேலும், கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்க சித்த மருத்துவம் பயனுள்ளதாக இருப்பதாகவும் ஆங்கில மருத்துவ சிகிச்சை முறைக்கு இணையாக சித்த மருத்துவ சிகிச்சை முறைக்கும் அரசு முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ சிகிச்சை முறையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது ரெம்டெசிவர், டாசிலிசுமாப் போன்ற மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும், இறப்பு எண்ணிக்கையை குறைக்க ஆரம்பக்கட்டத்திலேயே நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். கூறியுள்ளார்.

இதனிடையே சென்னையில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட உள்ளதாகவும் தமிழகத்தில் பரிசோதனை அதிகப்படுத்தப் பட்டுள்ளதை அறிந்து மத்தியக் குழு பாராட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனாவை கட்டுப்படுத்த சென்னையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை போன்று தான் மற்ற மாவட்டங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் விளக்கம் அளித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications