இந்திய தேர்தல் வரலாற்றில்.. முதல்முறையாக தேர்தல் பணியில் சுகாதார பணியாளர்கள்!
சென்னை: இந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக சுகாதார பணியாளர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் 6 கோடிக்கும் மேல் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் 88,937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகள்
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வாக்குச் சாவடிகளில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தோற்று உறுதி செய்தவர்கள் உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கலாம்.

குப்பை
இது தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பொருத்தவரை 5911 வாக்குச்சாவடிகள் உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கு 13 கிட் வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்களுக்கான கை கழுவும் திரவம், தேர்தல் அலுவலர்களுக்கான கை கழுவும் திரவம், முகக் கவசம், உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி, பொதுமக்களுக்கான கையுறை, தேர்தல் அலுவலர்களுக்கான கையுறை, மருத்துவ கழிவுகள் போட ஏதுவான குப்பை பை, பிபிஇ கிட் என அனைத்தும் இருக்கும்.

2 சுகாதார பணியாளர்கள்
அது போல் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 சுகாதார பணியாளர்கள் பணியில் இருப்பார்கள். தமிழகம் முழுவதும் 1,77,874 தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு நேரத்தில் கடைசி நேரம் கொரோனா தொற்று உறுதி செய்து அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கும் நிலையில் அவர்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதற்கும் சுகாதாரத்துறை தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கட்டுப்பாடுகள்
சுகாதாரத் துறை தரப்பில் வழங்கியுள்ள மருத்துவ உபகரணங்கள் இன்று வாக்குச்சாவடி இயந்திரத்துடன் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் படிப்படியாக அவசியமற்ற பணிகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications