Jacto Geo: 9 நாள் வேலைநிறுத்தம் முடிவிற்கு வந்தது.. ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு அறிவித்து இருக்கிறது.
Recommended Video
சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு அறிவித்து இருக்கிறது.
ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் 3500 ஊழியர்களுக்கும் அதிகமானோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனாலும் முதல்வருடன் பேசாமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். கடந்த 22ம் தேதி இந்த காலவரையற்ற போராட்டம் தொடங்கியது. மொத்தம் ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடந்து வந்தது.
குழு கூட்டம்
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சற்றுமுன் சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வாபஸ் பெற்றது
தற்போது நடக்கும் இந்த ஆலோசனையில் முடிவில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு அறிவித்து இருக்கிறது. 9 நாட்களாக நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
என்ன காரணம்
இதுகுறித்து ஊழியர்கள் அளித்துள்ள பேட்டியில், முதல்வரின் பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலை இருந்தால் கூட மக்கள், மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். பொதுத்தேர்வுகள் வர உள்ளதால் போராட்டத்தை கைவிடுகிறோம்.
பணியை
நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை ஏற்று நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம். இதனால் உடனே ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். எல்லோரும் மீண்டும் தங்கள் பணிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது.