Jacto Geo: ஆசிரியர்களுடன் முதல்வர் பேச மாட்டார்.. முடியாது.. அரசு காரசார பதில்!
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
Recommended Video

சென்னை: வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று காரசார விவாதங்கள் வைக்கப்பட்டது. இந்த போராட்டம் தற்போது உச்ச கட்டத்தை அடைந்து இருக்கிறது.

கடந்த 7 நாட்களாக இந்த போராட்டம் நடக்கிறது. ஜாக்டோ ஜியோ ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராடுகிறார்கள். இன்று நடந்த விசாரணையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்தனர்.
அதில், தமிழக முதல்வர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டும்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை ஹைகோர்ட்டில் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது.
தமிழக முதல்வர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை செய்ய மாட்டார். ஓரிரு நாளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விடும். போராட்டம் முடியும் நிலையில் உள்ளது.
பணியாளர்கள் யாருடனும் முதல்வர் பேச்சு நடத்த மாட்டார் . 10 ஆயிரம் பணிக்கு மூன்று லட்சம் பணியாளர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அதனால் போராடும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது, என்று அரசு கூறியுள்ளது.
இதையடுத்து நீதிபதி கிருபாகரன் இந்த விவகாரத்தில் தற்போது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது. முடிவுக்கு கொண்டு வர வேண்டுகோள் மட்டுமே விடுக்க முடியும். 90% சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்றத்தின் கோரிக்கையை ஆசிரியர்கள் ஏற்றது மகிழ்ச்சி. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண்பதே நீதிமன்றத்தின் நோக்கம், என்று கூறினார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications