ஜனநாயகனுக்கு சென்சார் சான்று உண்டா? நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: நடிகர் விஜயின் ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு ‛சென்சார்' சான்று வழங்ககோரிய வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பை நீதிபதி பி.டீ. ஆஷா வழங்குகிறார். இதனால் இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் ஜனநாயகன். விஜய் அரசியலுக்குள் நுழைந்து உள்ளதால் இது அவரது கடைசி படமாகும். இதனால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அரசியல் சார்ந்த வசனங்கள் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

பொங்கலையொட்டி இந்த திரைப்படம் ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் படத்துக்கு சென்சார் சான்று கிடைக்கவில்லை.
இதையடுத்து திரைப்படத்துக்கு சென்சார் சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதி பி.டீ.ஆஷா விசாரித்தார்.
பட தயாரிப்பு நிர்வாணம் சார்பில், ‛‛பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால் 'U/A சான்றிதழ் வழங்குகிறோம் எனக் கூறினார்கள். நாங்களும் திருத்தங்கள் செய்தோம். ஆனால் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக அளித்த புகாரில் சென்சார் சான்று வழங்கப்படவில்லை.
படம் இன்னும் வெளியாகாத நிலையில் ரூ.500 கோடி முதலீடு செய்யபட்டுள்ளது. யாரோஅளித்த புகாரின்பேரில் இன்னும் சான்றிதழ் வழங்கமால் இருக்கிறார்கள். சென்சார் சான்று வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து சென்சார் வாரியம் சார்பில், ‛‛குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டுமென மனுதாரர் கோரமுடியாது. , படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மறு ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தில் ராணுவப் படைகளின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதால், அத்துறை நிபுணரிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்.
சென்சார் குழுவில் இடம்பெறாத உறுப்பினர்களை கொண்ட ஒரு புதிய குழுவால் ஜனநாயகன் படம் மறுபடியும் பார்க்கப்பட வேண்டும். தணிக்கை குழு பார்த்த பிறகு மறுதணிக்கைக்கு உத்தவிட சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. இதுபற்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் அனுப்பினோம். 14 காட்சிகளை நீக்க ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது. நாளை மறுதினம் படம் ரிலீஸ் எனக்கூறி சென்சார் சான்று கேட்க முடியாது'' என்று வாதிடப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் தான் நாளை காலை 10.30 மணிக்கு ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்று வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்க உள்ளது. இதனால் இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக சென்சார் சான்று கிடைக்காதாதல் திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சென்சார் சான்று பிரச்சனை காரணமாக தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரோடக்சன்ஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக படத்தை ஒத்திவைத்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ம் தேதி வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications