ஒரே நாளில் ரூ.3500 சரிவு.. சரசரவென குறைந்த மல்லிகை விலை! பனி குறைந்ததுமே குவிய தொடங்கியது மல்லிப்பூ!
சென்னை: மல்லிகைப்பூ விலை தாறுமாறாக எகிறி இருந்ததால் சாலையோர பூக்கடைகளில் மல்லிப்பூவே விற்கப்படாத நிலை இருந்தது. இந்நிலையில், தற்போது மல்லி பூக்கள் விலை வெகுவாகக் குறைந்துள்ளது. மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ இன்று ரூ.3500 வரை குறைந்து, ரூ.1350 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மல்லிகை உள்ளிட்ட மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு விளையும் பூக்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை செடிகளிலேயே மொட்டுக்கள் சிறுத்து பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பூக்களின் வரத்தும் வெகுவாக குறைந்தது. வரத்துக் குறைவு மற்றும் தேவை காரணமாக பூக்களின் விலை தடாலடியாக எகிறியது.
மல்லிகைப்பூ கிலோ ரூபாய் 7,000, 8000 என விற்பனை ஆனது. தற்போது தேவைகள் குறைந்ததாலும், பனிப்பொழிவு காலம் மாறி வருவதாலும், பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று (பிப்ரவரி 9) ஒரே நாளில் மல்லிகையின் விலை கிலோவுக்கு ரூ. 3,500 வரை குறைந்துள்ளது. அதன்படி, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1350 ஆக விற்பனையாகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் மல்லிகை சாகுபடி அதிகம் உள்ளது. சில மாதங்களாக நிலவிய சாரல் மழை, பனியால் மல்லிகை விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் கிலோ ரூ.4000 முதல் 8,000 வரை மல்லிகை விலை இருந்தது. தற்போது வெயில் துவங்கியதால் மல்லிகை பூக்கள் விளைச்சலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கிலோ ரூ. 500 முதல் 1000 வரை விலை உள்ளது.
கோடை காலத்தில் மல்லிகை பூக்கள் விளைச்சல் அதிகம் இருக்கும். நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு ஒரு சில கிலோ அளவில் இருந்த மல்லிகை வரத்து தற்போது 500 கிலோ அளவில் உயர்ந்துள்ளது. மல்லிகை விளைச்சல் துவங்கி உள்ளதால் மல்லிகைப்பூக்கள் அதிகளவில் மார்க்கெட்டுக்கு வரத் தொடங்கி உள்ளன. இதனால் விலை வெகுவாகக் குறைந்துள்ளது. விளைச்சல் இன்னும் அதிகரிக்கும்போது மல்லிப்பூ விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications