உழைப்பவர் வியர்வை உலரும் முன்பே ஊதியம் தரணும்! நபிகளாரின் பொன்மொழியுடன் ஜவாஹிருல்லா மே தின வாழ்த்து!
சென்னை: உழைப்பவர் வியர்வை உலரும் முன்பே அவர்களுக்கு ஊதியம் தரக் கூறிய நபிகளாரின் பொன்மொழியை சுட்டிக்காட்டி ஜவாஹிருல்லா மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தி வருமாறு;
உழைப்பாளிகளின் பெருமையை உலகெங்கும் உரைத்திடும் உயரியத் திருநாள் இந்த மேதினம். உழைப்புக்கேற்ற ஊதிய மின்மை, கொத்தடிமைத் தனமான இன்னல்கள் ஆகியவற்றில்இருந்து தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமாக உலக அரங்கில் உரிமைகளை உறுதிசெய்த நாள் மே 1.
உழைப்பவர் வியர்வை உலரும் முன்பே அவர் தம் ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்றார்கள் நபிகளார்.

மனிதக்குல வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும்போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இரத்தம் சிந்தினார்கள், போராடினார்கள்.
1884 முதல் 1889 வரை உலக அரங்கில் நடைபெற்ற தொழிலாளி வர்க்கத்தின் புரட்சியின் நீட்சிதான் இந்த மே தினம். இந்தியாவில் முதன் முறையாக மே தினம் சென்னை மாநகரில் கொண்டாடப்பட்டதின் நூற்றாண்டாகவும் இந்த ஆண்டு விளங்குகின்றது.
இன்று இந்தியாவில் பெருந்தொழில் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் பெருந்தியாகங்களில் விளைவாகப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகள் லாவகமாகப் பறிக்கப்படும் சூழல் நிலவுகின்றது.
தொழிலாளர் வர்க்கத்திற்குச் சவால்கள் நிறைந்த இச்சூழலில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி எடுப்போம்.
உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையைப் பறைசாற்றும் இந்நாளில் வகுப்புவாத, பாசிச சக்திகளை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவும் உறுதி ஏற்போம். தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications